10 நிமிடம் சட்டசபைக்கு வந்த ஜெயலலிதா!
சென்னை: அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க் கட்சித் தலைவருமான ஜெயலலிதா இன்று சட்டப்பேரவைக்கு வந்தார். ஆனால், 10 நிமிடங்களில் கிளம்பிப் போய்விட்டார்.
இந்த ஆண்டில் முதல் கூட்டத் தொடர் கடந்த 6ம் தேதி கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலாவின் உரையுடன துவக்கியது. ஆனால், அன்றைய தினம் ஜெயலலிதா அவைக்கு வரவில்லை.
நேற்று மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து பேரவைக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.
இன்று சட்டசபையின் மூன்றாம் நாள் கூட்டம் நடந்தது. இந் நிலையில் ஜெயலலிதா காலை சட்டசபைக்கு வந்தார். சட்டசபை உறுப்பினர் ரிஜிஸ்டரில் கையெழுத்துப் போட்டுவிட்டு அவைக்கு வந்த அவர் 10 நிமிடம் மட்டுமே தனது இருக்கையில் அமர்ந்துவிட்டு கிளம்பிச் சென்றுவிட்டார்.
பாமக வரவில்லை:
இந் நிலையில் பாமக உறுப்பினர்கள் யாரும் இன்று சட்டசபைக்கு வரவில்லை. நேற்றும் அவர்கள் அவைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications