விரக்தியில் ராஜபக்சே-மீண்டும் மதுவை நாடுகிறார்!
கொழும்பு: உலகிலேயே மிகப் பெரிய அளவில் மன நெருக்கடிக்கு ஆளாகியுள்ள ஒரே நபராக மகிந்தா ராஜபக்சேதான் இருப்பார். அந்த அளவுக்கு அவரைச் சுற்றிலும் ஏகப்பட்ட நெருக்கடிகள். அத்தனயையும் சமாளிக்க முடியாமல் கடும் மன அழுத்தத்திற்குள்ளாகியுள்ள ராஜபக்சே இடையில் நிறுத்தி வைத்திருந்த மதுப் பழக்கத்தை மீண்டும் தொடங்கியுள்ளாராம்.
அதிபர் தேர்தலில் கிட்டத்தட்ட தோல்விதான் கிடைக்கும் என்ற நிலையில் உள்ளார் ராஜபக்சே. காரணம் அவருக்கு எதிராக பல விஷயங்கள் விஸ்வரூபம் எடுத்து நிற்கின்றனவாம்.
போரில் கிடைத்த வெற்றியைத்தான் பிரதானமாக நம்பியிருந்தார் ராஜபக்சே. அது ஒண்டி போதும், ஈசியாக ஜெயித்து விடலாம் என்ற மிதப்பில் இருந்து வந்தார். ஆனால் போரின் நாயகனாக சிங்களர்களால் வர்ணிக்கப்பட்ட பொன்சேகா பொளேர் பல்டி அடித்து அவரே அதிபர் தேர்தலில் நிற்கவே, பேயறைந்தது போலாகி விட்டது ராஜபக்சேவுக்கு.
இருந்தாலும் விடாத நம்பிக்கையுடன் பிரசாரத்தில் குதித்தார் ராஜபக்சே. ஆனால் தற்போது கட்டெறும்பு தேய்ந்து சித்தெறும்பு ஆன கதையாகி விட்டது ராஜபக்சேவின் நிலைமை.
சிக்கல் 1 - சொத்துக் குவிப்பு
அவரது சொத்துக் குவிப்புகள் குறித்து சிங்கள மீடியாக்கள் கிழித்தெடுத்து வருகின்றன. மேலும் தம்பி கோத்தபயா சேர்த்து வைத்துள்ள சொத்துக் குவிப்பையும் அம்பலப்படுத்தி வருகின்றன.
மறுபக்கம், பொன்சேகாவுக்கு கிட்டத்தட்ட அத்தனை பேருமே ஆதரவு என்ற நிலை உருவாகி விட்டது. குறிப்பாக தமிழர் கட்சிகள் பொன்சேகா பக்கம் அணிதிரண்டு போய் நிற்கின்றன.
போர் வெற்றியை ராஜபக்சேவும், பொன்சேகாவும் உரிமை கொண்டாடி வருகின்றனர். இருப்பினும் பொன்சேகா இந்த விஷயத்தில் தற்போது அதிக ஆர்வம் காட்டாமல் ராஜபக்சேவின் குறைகளையும், அரசின் தவறுகளையும் மட்டுமே சுட்டிக் காட்டி வருகிறார்.
சிக்கல் 2- பொன்சேகாவுக்குக் குவியும் ஆதரவு
காரணம் - பொன்சேகாவை தூக்கிப் பிடித்திருக்கும் ரணில் விக்கிரமசிங்கேவின் கட்சியும், ஆதரவு தரும் தமிழ் தேசிய கூட்டமைப்பும், மனோ கணேசன் கட்சியும் போரை ஆரம்பத்திலிருந்தே எதிர்த்து வந்தவை என்பதால்.
இப்படி அத்தனை சக்திகளும் பொன்சேகாவுக்கு ஆதரவாக திரண்டு நிற்கும் நிலையில் மேலும் ஒரு நெருக்கடியாக விலைவாசி உயர்வு ராஜபக்சேவை கிலி பிடித்து ஆட்டம் காண வைத்துள்ளது.
சிக்கல் 3- எகிறும் விலைவாசி உயர்வு
இலங்கையின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் பொலன்னருவா மாவட்டம் உள்ளது. இங்கு அதிக அளவில் விவசாயிகள் உள்ளனர். இவர்கள் தாங்கள் பயிரிடும் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட பொருட்களுக்கு சரியான விலை கிடைக்கவில்லை.
ஆனால், அந்த பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் மிகவும் ஆத்திரத்தில் உள்ளனர். அது மட்டுமின்றி குழந்தைகளுக்கான பால் பவுடர் மற்றும் பெட்ரோல், டீசல் முதல் குடிக்கும் தண்ணீர் வரை அனைத்து விலையும் விஷம் போல் ஏறிவருகிறது.
போதாக்குறைக்கு நகராட்சிகள் தங்கள் பங்குக்கு வரியை உயர்த்தியுள்ளன. இது நகர்புறம் மற்றும் கிராமப்புற மக்களை ஆளும் கட்சியின் மீது எரிச்சல் மற்றும் அதிருப்தி அடைய செய்துள்ளது.
பொதுவாக போரில் விடுதலைப்புலிகளிடம் இலங்கை ராணுவம் பெற்ற வெற்றி தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கவில்லை. விலை வாசி உயர்வு பிரச்சினைதான் எதிரொலிக்கிறது.
அது எதிர்க்கட்சி வேட்பாளர் பொன்சேகாவுக்கு ஆதரவு அலையாக வீசுகிறது. ஆகவே தேர்தலில் தோல்வி அடைந்து விடுவோம் என கலக்கத்தில் ராஜபக்சே உள்ளார்
சிக்கல் 4 - பெருகும் மன அழுத்தம்
இப்படி எக்குத்தப்பான சிக்கல்களால் மனம் உடைந்து போயுள்ள ராஜபக்சே, சமீபத்தில், மெதமுலன ராஜமஹா விகாரை என்ற புத்த கோவிலுக்குச் சென்று அங்குள்ள புத்த மதத் தலைவரை சந்தித்துப் புலம்பினாராம்.
என் கதை முடிந்து விட்டது. எனது சகோதரர்கள் என்னைத் திண்றுவிட்டனர் என வேதனையுடன் கூறினாராம்.
ராஜபக்சேவின் நிலைமையை புரிந்து கொண்ட அந்த மதத் தலைவர், அங்கிருந்து பிக்குகளை வெளியேறுமாறு கூறி விட்டு ராஜபக்சேவுடன் தனியாகப் பேசியுள்ளார்.
பதவிகள் கிடைக்கும், அவை இல்லாமல் போகும். அதுதான் உலக வழக்கம். தற்போது அதிக அளவில் மது அருந்துவதாக கேள்விப்பட்டேன். மது அருந்துவதால் எந்த நன்மையும் ஏற்படபோவதில்லை. உடல் நலமே கெடும் என்றும் அறிவுரை கூறினாராம்.
இடையில் மது அருந்துவதை நிறுத்தியிருந்தாராம் ராஜபக்சே. தற்போது சிக்கல்கள் அதிகரித்து வருவதால் மன அழுத்தம் அதிகமாகி அதை மறக்க மீண்டும் மதுவை அவர் நாடியுள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications