திருக்கானூர்பட்டி கோவில் ஜல்லிக்கட்டு - 200 பேர் படுகாயம்
Subscribe to Oneindia Tamil
தஞ்சை: தஞ்சை அருகே உள்ள திருக்கானூர்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் பங்கேற்ற 200 பேர் படுகாயம் அடைந்தனர்.
தஞ்சை அருகே உள்ள திருக்கானூர்பட்டியில் அந்தோணியார் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம்.
அதன்படி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் காளைகள் சீறிப் பாய்ந்து வந்தன. காளைகளை அடக்க முயன்றவர்கள் மற்றும் பார்வையாளர்கள் உள்பட சுமார் 100 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதில்12 பேர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதே போன்று, திருச்சி மாவட்டம் லால்குடியில் நடந்த ஜல்லிக்கட்டில் மாடுகள் முட்டியதில் 100 பேர் படுகாயமடைந்தனர்.












Click it and Unblock the Notifications