4ஜி மொபைல் சேவைக்கான பணிகளை துவக்கியது 'டிராய்'

3ஜி சேவையை மிஞ்சும் வகையில் வைஃபை மற்றும் வைமேக்ஸ் கலவையுடன், மிகத்துல்லியமான வீடியோ, அதிவிரைவான டிஜிட்டல் பரிமாற்றம் உட்பட பல்வேறு உயர் தொழில்நுட்ப அம்சங்களைக் கொண்ட 4ஜி தொலைத் தொடர்பு சேவைகளில் ஏற்கனவே அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஜப்பான் நாடுகள் ஈடுபட்டுள்ளன.
மோட்டோரோலா மற்றும் எரிக்ஸன் போன்ற நிறுவனங்கள் தங்கள் உபகரணங்களில் 4ஜி சேவைகளை சோதித்தும் பார்த்துவிட்டன. இந்நிலையில், 3ஜி சேவையில் இந்தியா பின்தங்கிய நிலைமை 4ஜி சேவைக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது என 'டிராய்' கருதுகிறது.
இதனால், இப்போதே 4ஜி சேவைக்கான அலைவரிசை மற்றும் இதர விவகாரங்கள் குறித்து இந்திய தொலைத் தொடர்பு கட்டுப்பாட்டு அமைப்பான 'டிராய்' ஆராயத் தொடங்கியுள்ளது.
'டிராய்' தலைவர் ஜே.எஸ்.சர்மா இதுபற்றி தெரிவிக்கையில், '2ஜி, 3ஜிக்கு அடுத்தபடியாக, ஜிகா பைட் வேகத்தில் மொபைலில் இணைய சேவை வழங்குவது உள்ளிட்ட உயர் நோக்கங்களுடன் இதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளோம்.
4ஜி டெலிகாம் சேவைகள் தொடர்பான பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆராய்ந்து வருகிறோம். இதற்கான பரிந்துரைகள் விரைவில் அரசிடம் சமர்ப்பிக்கப்படும்.
இதனால் 3ஜி பணிகளை ஓரங்கட்டிவிட்டதாக நினைக்கக்கூடாது. 3ஜி ஏலம் அடுத்த சில மாதங்களில் கண்டிப்பாக நடைபெறும்.
3ஜி விவகாரத்தில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் 4ஜிக்கு ஏற்படக் கூடாது என எதிர்பார்க்கிறோம்' என்றார்.












Click it and Unblock the Notifications