சிலியில் மீண்டும் நிலநடுக்கம்-மக்கள் பீதியில் ஓட்டம்

Subscribe to Oneindia Tamil

Chile Quake
சாண்டியாகோ: பூகம்பத்தால் 800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சிலி நாட்டில் இன்று அதிகாலை மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

கடந்த வாரம் சிலி நாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 800 பேர் உயிரிழந்தனர்.

பூகம்பத்தால் வீடுகள் இடிந்து 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உறைவிடம் இன்றி தவித்து வருகின்றனர்.

கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்துக்கு பின்னர் அவ்வப்போது பூகம்பத்துக்கு பிந்தைய அதிர்வுகள் உணரப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இன்று அதிகாலை மீண்டும் பூகம்பம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.0 மற்றும் 5.9 என பதிவாகியிருந்தது.

இந்த நிலநடுக்கம் சிலி நாட்டின் அருகே கடல் பகுதியில் மையமாகக் கொண்டு ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையத்தகவல் தெரிவித்தது.

சிலி தலைநகரம் சான்டியாகோ, வால் பரேசியோ உள்ளிட்ட பகுதிகளில் இந்த பூகம்பகம் உணரப்பட்டது.

சுனாமி ஏற்படலாம் என்றும் மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டது. இதனால் பீதி அடைந்த மக்கள் அலறியடித்து பாதுகாப்பான இடங்கள் நோக்கி ஓடினர்.

எனினும் சிறது நேரத்தில் சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது.

தைவானில் பயங்கர பூகம்பம்:

இதற்கிடையே தைவானின் தெற்கு பகுதியில் இன்று சக்திவாய்ந்த பூகம்பம் ஏற்பட்டுள்ளது.

ரிக்டர் அளவில் 6.4 என பதிவான இந்த சக்தி வாய்ந்த பூகம்பத்தால் பரவலாக பல்வேறு இடங்களில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின்றன.

தைவான் தலைநகரான தைப்பேயில் இருந்து சுமார் 400 கி.மீ தொலைவில் உள்ள கவோன்சியங் என்ற இடத்தை மையமாகக் கொண்டு இந்த பூகம்பம் ஏற்பட்டுள்ளது.

பல்வேறு இடங்களிவும் தொலைத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டு, கட்டிடங்களுக்கு சேதாரங்களும் ஏற்பட்டுள்ளன.

இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயமடைந்திருப்பதாக கூறப்படுகிறது. எனினும் உயிர் பலி குறித்து உடனடியாக தகவல்கள் இல்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+