பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு-தமிழகத்தில் இன்று ஆட்டோக்கள் ஓடவில்லை
Subscribe to Oneindia Tamil
சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று ஆட்டோ டிரைவர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டதால் ஆட்டோக்கள் ஓடவில்லை.
பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரம்பப் பெற வேண்டும். விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் இடதுசாரி தொழிற்சங்கங்கள் இன்று நாடு தழுவிய அளவில் பல்வேறு போராட்டங்களை நடத்துகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக ஆட்டோ ஸ்டிரைக்குக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதை ஏற்று இன்று தமிழகத்தில் ஆட்டோக்கள் ஓடாமல் ஸ்டிரைக்கில் ஈடுபட்டன.
ஸ்டிரைக் காரணமாக சென்னை நகரில் இன்று பெரும்பாலான ஆட்டோக்கள் ஓடவில்லை. இதனால் மக்கள் சற்று அவதிக்குள்ளானார்கள். புறநகர்ப் பகுதிகளிலும் ஆட்டோக்கள் சரிவர ஓடவில்லை.












Click it and Unblock the Notifications