ஐஏஎஸ் தேர்வில் 83 பேர் தேர்ச்சி- சைதை துரைசாமி மனித நேய அறக்கட்டளை சாதனை
சென்னை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சிவில் சர்வீஸ் பணிகளுக்கான மெயின் தேர்வில் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மனித நேய அறக்கட்டளை மூலம் பயின்ற 83 பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
மனித நேய அறக்கட்டளையை நடத்தி வருபவர் சைதை துரைசாமி. அதிமுக பிரமுகரான இவர் முன்னாள் எம்.எல்.ஏ ஆவார். அரசியல்வாதியாக இருந்தாலும் கூட சமூக சேவையில் மிகுந்த அக்கறையும், அதில் உண்மையான சேவை மனப்பான்மையும் கொண்டவர்.
சைதாப்பேட்டையில் குடிசைவாழ் மக்களுக்காக மாலை நேர கல்வியை வழங்கிய பெருமைக்குரியவர். பல்வேறு சமூக சேவைகளை செய்து வரும் சைதை சா. துரைசாமி தனது மனித நேய அறக்கட்டளை மூலம் ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆக விரும்புவோருக்காக இலவச பயிற்சி மையத்தை நடத்தி வருகிறார்.
இங்கு படித்தவர்களில் இதுவரை கடந்த 3 ஆண்டுகளில் 38 பேர் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளாக ஆகி தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பணியில் அமர்ந்துள்ளனர்.
இந்த ஆண்டுக்கான மெயின் தேர்வை இந்த மையத்திலிருந்து 171 பேர் எழுதினர். அவர்களில் தற்போது 83 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதில் விசேஷம் என்னவென்றால் 171 பேருக்கும் தங்குமிடம், உணவு, உடை உள்ளிட்ட அனைத்துமே இலவசமாக வழங்கப்பட்டன என்பதுதான்.
தற்போது தேர்ச்சி பெற்றுள்ள 83 பேருக்கும் விரைவில் நேர்முகத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கவுள்ளன. மேலும் நேர்முகத் தேர்வுக்காக டெல்லி செல்லும் போது அங்கு தங்குமிடம் உள்ளிட்ட வசதிகளையும் மனித நேய அறக்கட்டளையே செய்து தரும்.
இந்த மையத்தில் சேர்ந்து பயிற்சி பெற விரும்புவோர் இன்று மையத்திற்குச் சென்று பெயர், விவரங்களைப் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மைய முகவரி...
மனிதநேயம் ஐஏஎஸ்- ஐபிஎஸ் இலவச பயிற்சி மையம்
28, முதலாவது மெயின் ரோடு, சிஐடி நகர்,
சென்னை- 600 035.
பயிற்சி இயக்குநரின் செல்போன் எண் - +91-994070110
ஹெல்ப் லைன் எண்கள் - 9025408908 / 9840106162
தொலைபேசி எண்கள் - 044 – 24358373 / 24330095
ஆன்லைனில் விண்ணப்பிக்க ..
http://www.saidaiduraisamysmanidhaneyam.com/












Click it and Unblock the Notifications