சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கு - 5 பேர் முன் ஜாமீன் மனு தள்ளுபடி
நெல்லை: ஆழ்வார்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் கொலை வழக்கில் தொடர்புடைய 5 பேரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நெல்லை கோர்ட் உத்தரவிட்டது.
ஆழ்வார்குறிச்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் கடந்த ஜனவரி மாதம் 7ம் தேதி கீழஆம்பூர் ஆற்றுபாலம் அருகே வெடிகுண்டுகள் வீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கு தொடர்பாக நெல்லையை சேர்ந்த மாஜி எஸ்ஐ சண்முகசுந்தரம், சப்-இன்ஸ்பெகடர் சிவசுப்பிரமணியனின் மனைவி சிவகாமி, உட்பட அவரது உறவினர்கள் 11 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 6 பேர் பல்வேறு கோர்ட்டுகளில் சரண் அடைந்தனர்.
இந்நிலையில் மாஜி எஸ்ஐ சண்முகசுந்தரம், சிவகாமி, முருகன், சுப்பிரமணியன், கள்ளபிரான் ஆகிய 5 பேர் ஜாமீன் கேட்டு நெல்லை முதலாவது செசன்சு கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை நேற்று நடந்தது.
மனுவை விசாரித்த நீதிபதி விஜயராகவன் 5 பேரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications