தமிழகத்தில் 16% மாணவர்கள் உயர்கல்வி பெறுகிறார்கள் - விஐடி பல்கலை வேந்தர் தகவல்
சென்னை: தமிழகத்தில் உயர்கல்வி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை 16 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று வேலூர் விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விஸ்வநாதன் தெரிவித்தார்.
சென்னை பெருங்களத்தூர் ஜிகேஎம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய விஸ்வநாதன்,
'இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 6 லட்சம் மாணவர்கள் பொறியியல் துறையிலும், சுமார் 30 ஆயிரம் மாணவர்கள் மருத்துவத் துறையிலும் உயர்கல்வி பயின்று வருகின்றனர்.
தற்போது அகில இந்திய அளவில் உயர்கல்வி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை சராசரியாக 11 சதவிகிதம் உள்ளது. ஆனால், இது தமிழ்நாட்டில் 16 சதவிகிதமாக உயர்ந்து உள்ளது.
உலக அளவில் வளர்ந்து வரும் நாடுகளில் உள்ள 15 முதல் 18 சதவிகித இடத்தைத் தமிழகம் நெருங்கி இருப்பது மகிழ்ச்சியான விஷயம்.
ஆனால், பிகார் உள்ளிட்ட சில மாநிலங்களில் உயர்கல்வி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை 5 முதல் 6 சதவிகித அளவிலேயே இருப்பது வருந்தத்தக்கது.
வளர்ந்த நாடுகளில் உயர்கல்வி பெறுபவர்களின் எண்ணிக்கை 23 முதல் 28 சதவிகிதம் வரை உள்ளது. நம் நாட்டில் உயர்கல்வி பெறுவதிலும் நகர்ப்புற, கிராமப்புற மாணவர்கள், ஏழை, பணக்கார மாணவர்கள் என்ற வேறுபாடுகள் இருந்தாலும், சமீபத்தில் மாணவர்களுக்கு வங்கிக்கடன் உள்ளிட்ட சில வசதிகள் கிடைத்திருப்பது ஆறுதலான விஷயம்.
பொதுவாக, இங்கு உயர்கல்வி போதிக்க திறமையான பேராசிரியர்கள் இல்லை என்ற குறை முன்பு இருந்தது. ஆனால் வருமானம் உள்ளிட்ட வசதிகளுக்காக தொழில்துறைக்குச் சென்ற திறமையான பலர், இப்போது ஆசிரியர் பணிக்குத் திரும்பி வந்துள்ளனர்.
திறமையான மாணவர்கள் ஆசிரியப் பணிக்கு வரவேண்டும். விஐடியில் பயின்று தற்போது வெளிநாடுகளில் பணிபுரியும் பல பழைய மாணவர்கள் இந்தியா வரும்போது, விஐடிக்கு வந்து மாணவர்களிடம் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொள்வதுண்டு.
அதுபோல நீங்களும் உங்களது கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு உதவ முன்வர வேண்டும். சீன மாணவர்கள் இப்போது நம்மை விட வெகு வேகமாக முன்னேறி வருகின்றனர்.
நம்மைப் போலவே அவர்களுக்கும் ஆங்கிலத்தில் உரையாடும் திறன் குறைவாக உள்ளது. அவர்கள் இப்போது பெருமளவில் இங்கு வந்து தங்களது பன்முகத்திறன்களைக் கற்கத் தொடங்கி உள்ளனர்' என்றார்.
-
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை












Click it and Unblock the Notifications