தூத்துக்குடி: சுடுகாட்டில் விஷம் குடித்து முதிய தம்பதி தற்கொலை
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட வயதான தம்பதி சுடுகாட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
தூத்துக்குடி, மேலநாட்டார்குளத்தைச் சேர்ந்தவர் நாராயணன் (85). இவர் கடந்த பல ஆண்டாக சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இதனால், வாழ்க்கையில் விரக்தியடைந்த நிலையில் இருந்தார்.
இந்நிலையில், இவரும், இவரது மனைவி செல்லத்தாயும் (80) ஊருக்கு வெளியே உள்ள சுடுகாட்டில் விஷம் குடித்தனர். இதில் செல்லத்தாய் அந்த இடத்திலேயே இறந்தார்.
இதில் உயிருக்கு போராடிய நராயணனை நெல்லை ஹகிரவுண்ட் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு அவரும் பிரிதாபமாக இறந்தார்.












Click it and Unblock the Notifications