2 கொலை வழக்குகளில் தேடப்பட்ட 'பாம் கணேசன்' கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த குற்றவாளி பாம் கணேசன் போலீசிடம் சிக்கினார்.
சென்னை பழைய பல்லாவரத்தைச் சேர்ந்தவர் 'பாம்' கணேசன். வயது 30. தென் சென்னையில் பிரபல ரவுடி.
மடிப்பாக்கத்தில் மளிகைக் கடைக்காரர் ஒருவர் மாமூல் தராததால் அடித்து கொலை செய்த வழக்கில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.
மேலும், அப்பு என்ற ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில் இவருக்கு தொடர்பு உள்ளது. எனவே இவரை பிடிக்க போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டனர்.
இந்நிலையில், திரிசூலம் அம்மன் நகரில் இன்று போலீசார் இவரை மடக்கிப் பிடித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications