அணு உலை விபத்து மசோதா: 'டிமிக்கி' அடித்த எம்.பிக்கள்- சோனியா கடும் கோபம்
டெல்லி: அணு உலை விபத்து இழப்பீடு மசோதாவை தாக்கல் செய்ய அரசுத் திட்டமிட்டிருந்த நிலையில், லோக்சபாவுக்கே வராமல் டிமிக்கி அடித்த 35 காங்கிரஸ் எம்.பிக்கள் மீது சோனியா காந்தி கடும் கோபமாக உள்ளார்.
மசோதாவை தாக்கல் செய்யாமல் அரசு பின் வாங்கியதற்கு சொந்தக் கட்சியைச் சேர்ந்த எம்.பிக்கள் கணிசமானோரே வராமல் டபாய்த்ததுதான் காரணம் என்று கூறப்படுகிறது.
இந்த 35 பேரிடம் விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்க சோனியா திட்டமிட்டுள்ளார்.
திங்கள்கிழமையன்று அணு உலை விபத்து இழப்பீடு மசோதாவைத் தாக்கல் செய்ய அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால் எதிர்க்கட்சிகளுக்குப் பயந்து இதை கடைசி நேரத்தில் ஒத்திப் போட்டு விட்டது.
ஆனால் அன்றைய தினம் 35 காங்கிரஸ் எம்.பிக்கள் வராமல் இருந்ததும் கூட இந்த ஒத்திவைப்புக்கு ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. சொந்தக் கட்சியைச் சேர்ந்த கணிசமான எம்.பிக்களே மசோதா தாக்கல் தினத்தன்று வராமல் போய் விட்டனர் என்ற அவப் பெயர் காங்கிரஸுக்கு வந்து விடக் கூடாது என்பதற்காகவே மசோதாவை கடைசி நேரத்தில் அரசு ஒத்திப் போட்டு விட்டதாக கூறப்படுகிறது.
கட்சிக் கொறடா உத்தரவு பிறப்பித்திருந்தும், அவைக்கு வராமல் போயிருந்த 35 எம்.பிக்கள் மீதும் சோனியா காந்தி கடும் கோபமாக இருக்கிறாராம். அவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பவும் அவர் முடிவு செய்துள்ளாராம்.












Click it and Unblock the Notifications