கடன்களுக்கான வட்டி உயராது! - ஸ்டேட் வங்கி
Subscribe to Oneindia Tamil

ரிசர்வ் வங்கி நேற்று ரெபோ விகிதம் மற்றும் ரிவர்ஸ் ரெபா விகிதம் ஆகியவற்றை உயர்த்துவதாக அறிவித்தது. இதைத் தொடர்ந்து வங்கிகளும் கடன் மீதான வட்டி விகிதத்தை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் டெல்லியில் வெள்ளிக்கிழமை நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓபி பட், ஏப்ரல் 20ம் தேதி ரிசர்வ் வங்கியின் கொள்கை முடிவு பற்றிய கூட்டம் நடைபெறவுள்ளது என்றும் அதுவரை ஸ்டேட் வங்கி காத்திருக்கும் என்றும் தெரிவித்தார்.
பணவீக்கம் உயர்வதை கட்டுப்படுத்தும் வகையில் ரெபோ மற்றும் ரிவர்ஸ் ரெபோ விகிதம் 0.25 சதவிகிதம் உயர்த்தப்படுவதாக நேற்றிரவு ரிசர்வ் வங்கி எதிர்பாராத வகையில் அறிவித்துள்ள நிலையில், ஸ்டேட் வங்கியின் இந்த அறிவிப்பு எத்தனை நாள் தாக்குப் பிடிக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications