கள்ளநோட்டு அச்சடித்த போலீஸ்காரர் உட்பட 3 பேர் கைது
நெல்லை: கள்ளநோட்டு அச்சடித்த போலீஸ்காரர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை மாவட்டம், பணகுடி பகுதியில் ஒரு கும்பல் 100 ரூபாய், 500 ரூபாய் கள்ள நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விடுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
தனிப்படை போலீசார் பணகுடி பகுதியில் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில், பணகுடியை சேர்ந்த சேகரராஜ் மகன் ராபர்ட் (வயது 40), காவல்கிணற்றில் உள்ள ஒரு பேக்கரியில் 100 ரூபாய் கொடுத்து பொருட்கள் வாங்கி கொண்டு இருந்தார்.
அவர் மீது சந்தேகம் கொண்ட தனிப்படை போலீசார், அவரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். அவர் கையில் வைத்து இருந்த 100 ரூபாய் நோட்டை பறிமுதல் செய்து சோதனை செய்தனர்.
அது கள்ளநோட்டு என்பது தெரிய வந்தது. அவரிடம் இருந்து நான்கு 100 ரூபாய் கள்ள நோட்டுக்களை போலீசார் கைப்பற்றினர்.
இதைதொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காட்டை அடுத்த காட்டுவிளையை சேர்ந்த ராமசாமி மகன் சேகர் (40) என்பவரிடம் இருந்து ராபர்ட் கள்ளநோட்டுகளை வாங்கியது கண்டு பிடிக்கப்பட்டது.
இந்த கள்ள நோட்டு புழக்கத்தில், ராபர்ட் உடன் துரை மகன் அய்யப்பன்(30) என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
சேகர், தூத்துக்குடியில் ஆயுதப்படை போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். தற்போது அவர் மருத்துவ விடுப்பில் இருப்பதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து போலீஸ்காரர் சேகர், அய்யப்பன் ஆகியோரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
சேகர் வீட்டில் சோதனை செய்த போது, கள்ள நோட்டுகள் தயாரிக்க பயன்படுத்திய கலர் பிரிண்டர், மை, காகிதங்கள் மற்றும் பேப்பர் கட்டர் போன்ற நவீன கருவிகள் இருந்தன.
அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பிடிபட்ட 3 பேரிடம் இருந்து ரூ.38 ஆயிரம் மதிப்புள்ள கள்ளநோட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications