ஹெட்லியை விசாரிப்பதில் அமெரிக்கா குழப்பம் விளைவிக்கவில்லை - ப.சிதம்பரம்
லண்டன்: ஹெட்லியை விசாரிக்க அனுமதிப்பது தொடர்பாக அமெரிக்காவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை, குழப்பமும் இல்லை என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
ஹெட்லியை இந்திய அதிகாரிகள் விசாரிக்கலாம் என முன்பு அமெரிக்கா தரப்பில் கூறப்பட்டது. ஆனால் திடீரென இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் டிம்மோத்தி ரோமர், அதுகுறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என்று கூறவே குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அமைச்சர் ப.சிதம்பரம் விளக்கம் தருகையில்,
இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்காவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இருப்பதாக நான் கருதவில்லை. இதில் எந்தக் குழப்பமும் இல்லை.
ரோமர் கூறியதையும், அமெரிக்க அட்டர்னி ஜெனரல் எரிக் ஹோல்டர் என்னிடம் பேசியதையும் ஒப்பிட்டுப் பார்த்தால் அவற்றில் எந்த முரண்பாட்டையும் நீங்கள் காண முடியாது என்றார் ப.சிதம்பரம்.
முன்னதாக நேற்று இரவு தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை அளித்த பேட்டியில், ரோமரின் பேச்சுக்கு அதிக முக்கியத்துவம் தரத் தேவையில்லை என்று கூறினார்.












Click it and Unblock the Notifications