கல்லூரி கௌரவ விரிவுரையாளர் போராட்டம் வாபஸ்
Subscribe to Oneindia Tamil
மதுரை: அரசு கலை மற்றும் அறிவியில் கல்லூரியில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்கள், தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 8ம் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில், இச்சங்க பொறுப்பாளர்களுடன் நேற்று முன்தினம் அரசு பேச்சுவார்த்தை நடத்தியது.
இதில், கௌரவ விரிவுரையாளர்களின் கோரிக்கைகள் குறித்து பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கும் என்று அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.
இதனையடுத்து, நேற்றுடன் கவுரவ விரிவுரையாளர்கள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டு பணிக்கு திரும்பினர்.












Click it and Unblock the Notifications