10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த ஏன் 'பொன்' நகரமாக மாற்றவில்லை: விஜயகாந்த்

பென்னாகரம் தொகுதியில் தனது கட்சியின் வேட்பாளர் காவேரிவர்மனை பல்வேறு இடங்களில் கடும் வெயிலில் திறந்த வேனில் நின்றபடி பேசிய விஜய்காந்த் கூறுகையில்,
தேர்தல் பிரசாரத்துக்கு வந்த ஜெயலலிதா, பென்னாகரத்தை 'பொன்' நகரமாக மாற்றுவேன் என்று கூறியிருக்கிறார்.
10 ஆண்டுகால ஆட்சியில் பொன் நகரமாக மாற்றாமல், ஏன் 'தகரமாக' வைத்திருந்தார்?. பஞ்சம் பிழைக்க சென்றவர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தந்திருந்தால் அவர்கள் ஏன் வெளியூர் போகின்றனர்.
இதுவரை எதுவும் செய்யாதவர்கள் தான் மீண்டும் எல்லாம் செய்கிறோம் என்று பொய் சொல்கின்றனர்.தேர்தலில் 50 கோடியை செலவு செய்தவர்கள், 500 கோடியை சம்பாதிக்கின்றனர்.
27ம் தேதி வரை பென்னாகரம் தொகுதி மக்களின் காலை கழுவி பூஜை செய்ய சொன்னாலும் செய்வார்கள். அதன் பிறகு, எல்லாமே பழைய குருடி கதவை திறடி என்ற கதையாகி விடும்.
காவிரி, முல்லைப் பெரியாறு உள்ளிட்ட நதிநீர் பிரச்னையை தீர்க்க முடியாத திமுக அரசால் தமிழகம் பின்னுக்கு தள்ளப்பட்டு, வாழ்வாதரங்கள் அழிந்து வருகின்றன.
மக்களின் வரிப்பணத்தில் இலவசத் திட்டங்களை அறிவித்துவிட்டு அதில் பல்வேறு ஊழல்களை செய்து வருகிறது திமுக. அந்த ஊழல் பணத்தை வைத்துக்கொண்டு தேர்தலில் வாக்காளர்களை விலைக்கு வாங்க நினைக்கிறது.
மேலும் திமுகவினர் போலீஸாரின் அதிகாரத்தை கையில் வைத்துகொண்டு தேமுதிக தொண்டர்களை மிரட்டி வருகின்றனர். இத்தேர்தலில் அவர்களுக்கு வாக்காளர்கள் பாடம் கற்பிக்க வேண்டும்.
மக்கள் மீது அக்கறை இல்லாத பாமக, சாதி பெயரைச் சொல்லி வாக்கு சேகரித்து வருகிறது.
உங்களிடம் கெஞ்சி கேட்கிறேன், இந்த முறை முரசு சின்னத்தில் ஓட்டுப்போட்டு எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என்றார்.












Click it and Unblock the Notifications