தூத்துக்குடியில் டாஸ்மாக் விற்பனையாளர் வெட்டிக்கொலை
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி: தூத்துக்குடி டாஸ்மாக் மதுபானக் கடை விற்பனையாளர் மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார்.
தூத்துக்குடி அருகேயுள்ள தருவைகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனியசாமி (31).
இவர் தூத்துக்குடியில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையில் விற்பனையாளராகப் பணியாற்றி வந்தார்.
இவரும் உடன் பணியாற்றும் குமார் (31) என்பவரும் நேற்றிரவு கடையை மூடி விட்டு பைக்கில் வீட்டுக்குக் கிளம்பிச் சென்றிருக்கின்றனர்.
அப்போது மற்றொரு பைக்கில் வந்த மர்ம நபர்கள் 3 பேர் இவர்களை வழிமறித்துத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
அந்த இடத்திலிருந்து குமார் தப்பியோடிவிட்டதாகவும், அரிவாளால் வெட்டுப்பட்ட முனியசாமி சம்பவ இடத்திலிருந்து ஒரு கிமீ தொலைவில் இறந்து கிடந்ததாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications