லஷ்கர் தீவிரவாதிகளிடம் இருந்து அதிநவீன ஜிபிஎஸ் கருவிகள் பறிமுதல்
ஜம்மு: பாகிஸ்தான் பகுதியில் இருந்து காஷ்மீர் எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவிய லஷ்கர் தீவிரவாதிகளிடம் இருந்து அதிநவீன ஜிபிஎஸ் சாதனங்களை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவி ஜம்மு அருகே வனப் பகுதியில் பதுங்கியிருந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் 9 பேரை நேற்று பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைத்து சுட்டுக்கொன்றனர்.
இவர்களிடம் இருந்து அதிநவீன தொலைத் தொடர்பு சாதனங்களை பாதுகாப்பு படையினர் கைப்பற்றி உள்ளனர்.
ஜம்மு - காஷ்மீரின் சிக்கலான பாதைகளை தேர்ந்தெடுத்து அதிக சிரமமின்றி ஊடுருவல் செய்யவும், தப்பியோடவும் தீவிரவாதிகளுக்கு உயர் ரக ஜிபிஎஸ் சாதனங்கள் மிகவும் கைகொடுத்துள்ளது.
இதுபற்றி ஜம்முவில் உள்ள நௌஷாரா போலீஸ் எஸ்பி ஆர்.கே.பட் நிருபர்களிடம் கூறுகையில்,
'ஊடுருவல் பாதைகளை தேர்ந்தெடுக்கவும், ஜம்மு காஷ்மீரில் சிரமமின்றி நடமாடவும் தீவிரவாதிகள் ஜிபிஎஸ் சாதனங்களை பயன்படுத்துகிறார்கள்.
குறிப்பாக மலைத்தொடர்களை கடந்து ரகசிய பாதைகளை பயன்படுத்துவதற்கு, செயற்கைகோள் மூலம் இயங்கும் இந்த ஜிபிஎஸ் கருவிகள் அவர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கிறது.
நேற்று (சனிக்கிழமை) லஷ்கர் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் ஒன்பது தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
அவர்களில் இரண்டு பேரிடம் இருந்து தைவானில் தயாரிக்கப்பட்ட 'கார்மி்ன் ஜிபிஎஸ்' என்ற மிக நவீனமான சாதனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும் அவர்களிடம் இருந்த 2 ஜிபி எம்பி3 பிளேயர், மொபைல் போன்கள், பாகிஸ்தானில் வாங்கப்பட்ட சிம் கார்டுகள் ஆகியவையும் கைப்பற்றப்பட்டுள்ளன' என்றார்.












Click it and Unblock the Notifications