நிலவள வங்கியின் ஜப்தி நோட்டீஸ் - அதிர்ச்சியில் நெசவாளர்கள்
அரக்கோணம்: அரக்கோணம் நிலவள வங்கியில் கடன் பெற்ற விசைத்தறி தொழில் நெசவாளர்களின் வீடுகளை ஜப்தி செய்ய நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ள்தால் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
இன்னும் ஏழு தினங்களுக்குள் கடனை கட்டவில்லை எனில் வீடு ஜப்தி செய்யப்படும் என கடன் பெற்ற அனைவருக்கும் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. ஜப்தியைத் தடுக்க போராட்டம் நடத்தவும் நெசவாளர் சங்கங்கள் முடிவு செய்துள்ளன.
அரக்கோணம் நிலவள வங்கியில் பன்ணை சாரா கடன்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் கடந்த பல ஆண்டுகளுக்கு முன் அரக்கோணத்தை சுற்றியுள்ள பல்வேறு கிராமப் பகுதிகளில் வசிக்கும் நெசவாளர்களுக்கு ரூ.35 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை கடனுக்கு விசைத்தறிகள் வழங்கப்பட்டன.
சில ஆண்டுகள் கடன் தவணைகளைச் செலுத்தி வந்தனர் நெசவாளர்கள்.
ஆனால் இப்போது நெசவுத் தொழில் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. ஆர்டர்கள் இல்லாத நிலையில் இந்த பாக்கிகளை தொடர்ந்து செலுத்த முடியாமல் அவதிப்படுகின்றனர் நெசவாளர்கள்.
இந்த கடன்களுக்கு 6 சத நேர்வட்டி தள்ளுபடி அளித்தால், அசலை உடனே கட்டத் தயாராக இருப்பதாகவும் தமிழக அரசுக்கு நெசவாளர் சங்கங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
இதுகுறித்து தமிழக கைத்தறி துணி நூல் துறை அமைச்சரிடம் பேச்சுவார்த்தை நடத்தவும் இச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த மூன்று தினங்களாக அரக்கோணத்தை அடுத்த குருவராஜபேட்டையில் அரக்கோணம் நிலவளவங்கி அதிகாரிகள் கடன் வசூலில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது அவர்கள் இன்னும் ஏழு தினங்களுக்குள் கடன்பாக்கி முழுவதையும் செலுத்தவில்லை எனில் வீடுகள் ஜப்தி செய்யப்படும் என குறிப்பிட்டு நோட்டீசு அளித்து வருகின்றனர். இதனால் நெசவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கடனில் வட்டி தள்ளுபடி அளித்தால் கடனை திருப்பிச் செலுத்த தயாராக இருப்பதாக அரசுக்கு தெரிவித்து அரசு அதுகுறித்த முடிவை பரிசீலனை செய்து வருகையில் நிலவளவங்கி அதிகாரிகள் ஜப்தி செய்வோம் என மிரட்டுவது மிகவும் கண்டிக்கத்தக்கது என நெசவாளர் அமைப்புகள் தெரிவித்துள்ளன.
விரைவில் இதைக் கண்டித்து போராட்டம் நடத்துவோம் என்றும் அவை அறிவித்துள்ளன.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications