திண்டுக்கல் பட்டாசு குடோனில் பயங்கர தீ - உரிமையாளர் பலி - 8 பேர் காயம்
திண்டுக்கல்: திண்டுக்கலில்ல உள்ள பட்டாசு குடோன் ஒன்றில் இன்று காலை ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் அதன் உரிமையாளர் உடல் சிதறி பலியானார். 8 பேர் படுகாயமடைந்தனர். நான்கு கட்டடங்கள் தரைமட்டமாகின.
திண்டுக்கல் மேற்கு ரத வீதியில் வானவெடிகளை இருப்பு வைத்திருக்கும் குடோன் உள்ளது. இங்கு பெருமளவிலான வானவெடிகள் வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் இன்று காலை, அங்கு பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.
இதில் இருப்பு வைக்கப்பட்டிருந்த வான வெடிகள் பயங்கர சப்தத்துடன் வெடித்துச் சிதறின. இதில் அந்தக் கட்டடமே தரைமட்டமானது. அக்கம் பக்கத்தில் உள்ள கட்டங்களும் பாதிப்படைந்தன. மொத்தம் நான்கு கட்டடங்கள் சேதமடைந்தன.
குடோனில் விபத்து ஏற்பட்டபோது இருந்த அதன் உரிமையாளர் தனசேகரன் உடல் கருகி, சிதறி பலியானார். மேலும் 8 பேர் படுகாயமடந்தனர்.
இவர்களை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு போயுள்ளனர். அவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications