லெனின் குறித்த விசாரணையில் கர்நாடக போலீஸ்!

நடிகை ரஞ்சிதாவுடன் அந்தரங்க கோலத்தில் நித்தியானந்தா இருந்த காட்சிகள் வீடியோ படமாக வெளியாகி பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து இருவரும் தலைமறைவாகி விட்டனர்.
இவர்கள் இருவரும் தனிமையில் இருந்த காட்சிகளை படம் பிடித்தவரான லெனின் கருப்பன், சர்ச்சை வெடித்த சில நாட்களில் சென்னைக்கு வந்து போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்து மேலும் ஒரு சிடியைக் கொடுத்து விட்டு தலைமறைவாகி விட்டார்.
தற்போது நித்தியானந்தா தொடர்பான வழக்குகளை கர்நாடக போலீஸார் விசாரித்து வருகின்றனர். அந்த மாநில சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு யோகப்பா, மேற்பார்வையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
சில நாட்களுக்கு முன்பு சேலம் ஆத்தூரில் உள்ள லெனின் குடும்பத்தாரிடம் சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர். லெனினின் அண்ணன் குணசேகரன், அண்ணி ராணி மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, கடைசியாக லெனின் ஆத்தூருக்கு எப்போது வந்தார்? நித்யானந்தா விவகாரத்துக்கு பின்னர் உங்களை தொடர்பு கொண்டு பேசினாரா? என்பது போன்ற கேள்விகளை போலீசார் கேட்டனர்.
இதற்கு பதில் அளித்த லெனின் உறவினர்கள் 19 வயதில் இந்த ஊரை விட்டு சென்ற லெனின் 2 முறைதான் இங்கு வந்துள்ளார். எங்களுடன் லெனின் தற்போது தொடர்பில் இல்லை என்று தெரிவித்தனர்.
இருப்பினும் 3 நாட்கள் வரை அங்கு முகாமிட்டு லெனின் பற்றிய தகவல்களை பெங்களூர் போலீசார் திரட்டினர். நித்யானந்தா விவகாரம் பூதாகரமாக கிளம்பிய நாளில் இருந்து சீடர் லெனின் சென்னையில் தங்கியுள்ளார். இங்கு அவருக்கு நெருக்கமான நண்பர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இவர்களின் ஆதரவுடன் தொடர்ந்து சென்னையில் இருக்கும் சீடர் லெனினிடம் நேரடியாக விசாரணை நடத்த சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இதற்காக விரைவில் அவர்கள் சென்னை வருகிறார்கள். இங்கு மத்திய குற்றப்பிரிவு போலீசுடன் கலந்து ஆலோசிக்கும் பெங்களூர் போலீசார் லெனின் தொடர்பாவும் சாமியார் தொடர்பாகவும், மேலும் பல தகவல்களை திரட்டுகிறார்கள்.
இந்த நிலையில் நித்தியானந்தா குறித்து தகவல் தெரிந்தோர் அதுகுறித்து 080-22381894, 9480800123 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று கர்நாடக சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு யோகப்பா கூறியுள்ளார்.
மேலும், சி.ஐ.டி. போலீஸ், கார்ல்டன் ஹவுஸ், பேலஸ் ரோடு, பெங்களூர் என்ற முகவரிக்கும் நேரில் வந்து தெரிவிக்கலாம் எனவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications