சென்னையில் இரவில் நிலநடுக்கம் - பீதியில் மூழ்கிய மக்கள்

Subscribe to Oneindia Tamil

Earth Quake
சென்னை : சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் பீதியடைந்து வீடுகள், கட்டடங்களை விட்டு வெளியேறினர்.

சென்னையில் நேற்று இரவு நுங்கம்பாக்கம், புரசைவாக்கம், கொட்டிவாக்கம், ராயப்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் 10.30 மணி அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இரவு நேரம் என்பதால் மக்கள் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர்.

வீடுகளில் வைக்கப்பட்டிருந்த பாத்திரங்கள் உள்ளிட்டவை அசைந்ததாக பூகம்பத்தை உணர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

அந்தமான் தீவுப் பகுதியில் நேற்று இரவு பத்தரை மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் விளைவே சென்னையிலும் பூகம்பத்தை மக்கள் உணர்ந்துள்ளனர். அந்தமான் பூகம்பத்தின் அளவு 6.9 ரிக்டராக தெரிய வந்துள்ளது.

சென்னையில் உணரப்பட்ட பூகம்பம் வெறும் 3 விநாடிகள்தான் நீடித்தது. நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்திலும் பூகம்பத்தை உணர்ந்துள்ளனர். சென்னை நகரின் பல பகுதிகளில் பூகம்பம் உணரப்பட்டாலும் கூட இதனால் எந்தவித பாதிப்பும் இல்லை.

புவனேஸ்வர், கட்டாக் தவிர ஜெகத்சிங்பூர், ஜஜ்பூர் உள்ளிட்ட நகரங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.

இதேபோல மியான்மர், ஹாங்காங்கிலும் கூட நிலநடுக்கம் உணரப்பட்டது.

ஆனால் அந்தமானில் பல வீடுகள் சேதமடைந்துள்ளன. 2 பேர் காயமடைந்துள்ளனர். வேரு பெரிய சேதம் எதுவும் இல்லை. கடலில் பூமி அதிர்ச்சியின் மையம் இருந்தாலும் கூட சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+