உணவுப் பணவீக்கம் 16.22 சதவிகிதமாக உயர்வு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: நாட்டின் உணவுப் பணவீக்கம் மீண்டும் உயர்வடைந்துள்ளது. மார்ச் 20-ம் தேதி முடிந்த வாரத்தில் 16.35 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
உணவு தானியம் மற்றும் பால் பொருள்களின் விலையில் ஏற்பட்ட உயர்வே இதற்குக் காரணம் என் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முந்தைய வாரத்தில் உணவுப் பணவீக்கம் 16.22 சதவிகிதமாக இருந்தது.
நடப்பு வாரத்தில் மட்டும் உணவு தானியப் பொருள்களின் விலை 31.55 சதவிகிதம் உயர்ந்து காணப்பட்டது. பால் பொருள்கள் 18.74 சதவிகிதமாக இருந்தது.
நாட்டின் ஒட்டுமொத்தப் பணவீக்கமும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜனவரியில் 8.56 சதவிகிதமாக இருந்த பணவீக்கம் பிப்ரவரியில் 9.89 சதவிகிதமாக உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல் டீஸல் போன்றவற்றின் தொடர்ச்சியான விலையேற்றமே இதற்குக் காரணம் என்று தெரிவித்துள்ளது மத்திய நிதி அமைச்சகம்.












Click it and Unblock the Notifications