எந்தக் கட்சியாக இருந்தாலும் தொண்டர்கள் உயிரை மாய்க்க முயலக் கூடாது - வைகோ

கேரளாவுக்குப் பொருட்கள் செல்வதை முடக்கும் போராட்டம் குறித்து நான்கு நாட்கள் ஈரோடு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து விளக்கவுள்ளார் வைகோ. இதற்காக அவர் நேற்று ஈரோடு வந்திருந்தார்.
பென்னாகரம் தேர்தல் தோல்வியால் மனம் உடைந்து தீக்குளித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதிமுக தொண்டர் தங்கவேலுவைப் பார்த்து நலம் விசாரித்த பின்னர் காளைமாட்டு சிலை அருகே தொடக்க விழாவில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது வைகோ பேசுகையில், அ.தி.மு.க., தோல்வியைத் தாங்காமல், அ.தி.மு.க., தொண்டர் தீக்குளித்தது வேதனையளிக்கிறது. இயக்கத்தின் அஸ்திவாரமாக, தங்களுக்கு என்ன கிடைக்கும் என நினைக்காமல் இருப்பவர்கள்தான் தொண்டர்கள். உடல், மனம் கருகிய நிலையில், பார்க்க முடியாத அளவுக்கு அவர் உடல் சிதைந்து கிடக்கிறது.
எந்த இயக்கத்திலும் தொண்டர்கள் தங்களை அழித்துக் கொள்ள கூடாது. தோல்வியை தாங்கிக் கொண்டு எதிர்த்து போராடும் தைரியம் இருக்க வேண்டும்.பென்னாகரம் தேர்தலில் மற்ற வேட்பாளர்கள் வாங்கிய ஓட்டுக்களை விட 1,801 ஓட்டுகள் தான் ஆளுங்கட்சி அதிகம் பெற்றுள்ளது.
இதை வைத்து பார்க்கும் போது அவர்களுக்கு 50 சதவீத ஆதரவு கூட இல்லை.மின்தடை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்னையால் ஆளும் கட்சிக்கு எதிர்ப்பு அதிகம் உள்ளது. திருமங்கலம் இடைத்தேர்தல் முதல் பென்னாகரம் தேர்தல் வரை 10 ஆயிரத்து 500 ஓட்டுகள் தான் அதிகம் பெற்றுள்ளனர். எதிர்ப்பு ஓட்டு ஆளும் கட்சிக்கு அதிகம் உள்ளது என்றார் வைகோ.
பின்னர் மதிமுகவின் போராட்டம் குறித்து வைகோ விளக்குகையில்,
எதிர்கால தமிழர்களின் வாழ்வாதாரம் காக்கவே இந்த சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்படுகிறது. தென் மாவட்டங்களின் முக்கிய நீராதாரமான முல்லை பெரியாறு அணையை உடைக்கவும், தாராபுரம், கரூர் பகுதிக்கு குடிநீர், பாசனத்துக்கு ஆதாரமான அமராவதி அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியான பாம்பாற்றின் குறுக்கே அணை கட்டவும் கேரள அரசு முயற்சி செய்கிறது.
அடுத்ததாக பவானியாற்றின் குறுக்கே அணை கட்ட அம்மாநில அரசு நடவடிக்கை எடுப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.தமிழக மக்களின் முக்கிய நீராதாரங்களை பாழ்படுத்தும் கேரள அரசை கண்டித்து மே 28ல் கேரளா செல்லும் அனைத்து வாகனங்களும் நிறுத்தப்படும். இதற்காக மக்களின் ஆதரவை திரட்டவே இந்த சுற்றுப்பயணத்தை துவக்கியுள்ளோம் என்றார் வைகோ.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications