Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எந்தக் கட்சியாக இருந்தாலும் தொண்டர்கள் உயிரை மாய்க்க முயலக் கூடாது - வைகோ

Subscribe to Oneindia Tamil

Vaiko
ஈரோடு: எந்த கட்சியாக இருந்தாலும் இயக்கமாக இருந்தாலும், தோல்விகளைத் தாங்கிக் கொண்டு அதை தாண்டி போராடும் தைரியத்துடன் தொண்டர்கள் இருக்க வேண்டும். தங்களைத் தாங்களே அழித்துக் கொள்ள முயலக் கூடாது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

கேரளாவுக்குப் பொருட்கள் செல்வதை முடக்கும் போராட்டம் குறித்து நான்கு நாட்கள் ஈரோடு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து விளக்கவுள்ளார் வைகோ. இதற்காக அவர் நேற்று ஈரோடு வந்திருந்தார்.

பென்னாகரம் தேர்தல் தோல்வியால் மனம் உடைந்து தீக்குளித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதிமுக தொண்டர் தங்கவேலுவைப் பார்த்து நலம் விசாரித்த பின்னர் காளைமாட்டு சிலை அருகே தொடக்க விழாவில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது வைகோ பேசுகையில், அ.தி.மு.க., தோல்வியைத் தாங்காமல், அ.தி.மு.க., தொண்டர் தீக்குளித்தது வேதனையளிக்கிறது. இயக்கத்தின் அஸ்திவாரமாக, தங்களுக்கு என்ன கிடைக்கும் என நினைக்காமல் இருப்பவர்கள்தான் தொண்டர்கள். உடல், மனம் கருகிய நிலையில், பார்க்க முடியாத அளவுக்கு அவர் உடல் சிதைந்து கிடக்கிறது.

எந்த இயக்கத்திலும் தொண்டர்கள் தங்களை அழித்துக் கொள்ள கூடாது. தோல்வியை தாங்கிக் கொண்டு எதிர்த்து போராடும் தைரியம் இருக்க வேண்டும்.பென்னாகரம் தேர்தலில் மற்ற வேட்பாளர்கள் வாங்கிய ஓட்டுக்களை விட 1,801 ஓட்டுகள் தான் ஆளுங்கட்சி அதிகம் பெற்றுள்ளது.

இதை வைத்து பார்க்கும் போது அவர்களுக்கு 50 சதவீத ஆதரவு கூட இல்லை.மின்தடை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்னையால் ஆளும் கட்சிக்கு எதிர்ப்பு அதிகம் உள்ளது. திருமங்கலம் இடைத்தேர்தல் முதல் பென்னாகரம் தேர்தல் வரை 10 ஆயிரத்து 500 ஓட்டுகள் தான் அதிகம் பெற்றுள்ளனர். எதிர்ப்பு ஓட்டு ஆளும் கட்சிக்கு அதிகம் உள்ளது என்றார் வைகோ.

பின்னர் மதிமுகவின் போராட்டம் குறித்து வைகோ விளக்குகையில்,

எதிர்கால தமிழர்களின் வாழ்வாதாரம் காக்கவே இந்த சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்படுகிறது. தென் மாவட்டங்களின் முக்கிய நீராதாரமான முல்லை பெரியாறு அணையை உடைக்கவும், தாராபுரம், கரூர் பகுதிக்கு குடிநீர், பாசனத்துக்கு ஆதாரமான அமராவதி அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியான பாம்பாற்றின் குறுக்கே அணை கட்டவும் கேரள அரசு முயற்சி செய்கிறது.

அடுத்ததாக பவானியாற்றின் குறுக்கே அணை கட்ட அம்மாநில அரசு நடவடிக்கை எடுப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.தமிழக மக்களின் முக்கிய நீராதாரங்களை பாழ்படுத்தும் கேரள அரசை கண்டித்து மே 28ல் கேரளா செல்லும் அனைத்து வாகனங்களும் நிறுத்தப்படும். இதற்காக மக்களின் ஆதரவை திரட்டவே இந்த சுற்றுப்பயணத்தை துவக்கியுள்ளோம் என்றார் வைகோ.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+