வி.சி கொடிகம்பம் சாய்ப்பு - ஜி.கே.மணி மீதான வழக்கு திடீர் வாஸ்!
சென்னை: சேலம் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடிக்கம்பம் வெட்டப்பட்ட சம்பவத்தில் பாமக தலைவர் ஜி.கே.மணி மீதான வழக்கு திடீரென கைவிடப்பட்டது.
சேலம் மாவட்டம் கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த கருங்கல்லூரில் காந்திநகர் என்ற பகுதி உள்ளது. இங்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடிக்கம்பம் வைக்கப்பட்டிருந்தது.
கடந்த மாதம் 28ம் தேதி இந்த கொடி கம்பம் நள்ளிரவில் வெட்டப்பட்டு அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கொளத்தூர் ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயலாளர் தமிழ்மணி கொளத்தூர் போலீசில் புகார் செய்தார்.
அப்புகாரில் பாமக தலைவர் ஜி.கே.மணியின் தூண்டுதலின் பேரில் கொடிகம்பம் அகற்றப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. புகாரின் பேரில் கொளத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் ஜி.கே.மணிக்கு எதிரான மேல் நடவடிக்கை கைவிடப்பட்டதாக சட்டம்-ஒழுங்கு கூடுதல் போலீஸ் டிஜிபி ராதாகிருஷ்ணன் இன்று செய்தி வெளியிட்டுள்ளார்.
கொளத்தூர் போலீசார் புலன் விசாரணை நடத்தியதில், ஜி.கே மணிக்கு எதிரான புகார் உண்மைக்கு மாறானது என்று தெரிய வந்ததால் இந்த வழக்கு கைவிடப்பட்டதாக கூடுதல் டிஜிபி வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications