மின் தட்டுப்பாட்டை சமாளிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது - துரைமுருகன்
சென்னை: தமிழகத்தில் நிலவி வரும் மின் தட்டுப்பாட்டை சீரமைக்கத் தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது என்று சட்டசபையில் இன்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்க்கட்சிகள் தமிழகத்தில் மின்வெட்டு நிலவுவதாக கூறி அது குறித்து கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் கொண்டு வந்தன. பின்னர் அதிமுக, பாமக, சிபிஐ, சிபிஎம், மதிமுக உறுப்பினர்கள் இதன் மீது பேசினர்.
இதற்குப் பதிலளித்து சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசுகையில்,
உறுப்பினர்களின் கவலைகளை இந்த அரசு புறக்கணிக்கவில்லை. மின்வெட்டு இருப்பதை மறைக்கவும் இல்லை. இது தமிழகத்தில் மட்டும் இருக்கும் பிரச்சனையல்ல. இந்தியா முழுவதும் உள்ள நிலைதான்.
மின்சாரம் தயாரிக்க அனல், புனல், எரிவாயு, காற்றலை ஆகியவற்றை நம்பியிருக்கிறோம். மழை இருந்தால்தான் புனல் மின்சாரம் கிடைக்கும். காற்று அடித்தால்தான் காற்றலை மூலம் மின்சாரம் எடுக்க முடியும். நிலக்கரி மூலம் அனல் மின்சாரம் தயாரிக்கப் படுகிறது. இதற்கு மத்திய அரசிடமிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகிறது.
தமிழகத்தின் மின்சார தேவை 11 ஆயிரம் மெகாவாட் ஆகும். ஆனால் உற்பத்தி திறனோ 7300 மெகாவாட் தான். பற்றாக்குறை 3700 மெகாவாட் ஆகும். இதனை சமாளிக்க மின்சார வணிகர்கள் மூலமும் மத்திய அரசு தொகுப்பிலிருந்தும் மின்சாரத்தை பெற்று வருகிறோம். ஆனால் அதுவும் போதவில்லை.
தொடர்ந்து அதிக மின்சாரத்தை பெற முயற்சி மேற்கொண்டு இருக்கிறோம். ஏதோ தமிழ்நாட்டில்தான் மின்வெட்டு இருக்கிறது என்பதைப் போல உறுப்பினர்கள் பேசினார். இது எல்லா மாநிலத்திலும் உள்ளதுதான்.பெருநகரங்களை பொருத்தவரை ஐதராபாத் தினசரி 2 மணி நேரம் மின்வெட்டு உள்ளது. பெங்களூரில் 1 மணி நேரம் மின்வெட்டு இருக்கிறது. ஆனால் சென்னையிலோ 24 மணி நேரமும் மின்சாரம் உள்ளது. கிராமப்புற பகுதிகளை பொறுத்தவரை ஆந்திராவில் 4 மணி நேரமும் கர்நாடகத்தில் 6 மணி நேரமும் மின்வெட்டு உள்ளதுது.
தமிழ்நாட்டில் 3 மணி நேரம் சுழற்சி முறையில் மின்தடை உள்ளது. விவசாயத்தை பொறுத்தவரை ஆந்திராவில் 7 மணி நேரம் மின்சாரம் வழங்குகிறார்கள். கர்நாடகத்தில் 6 மணி நேரம்தான் மின்சாரம் கொடுக்கப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் பகலில் 6 மணி நேரமும் இரவில் 3 மணி நேரமுமாக 9 மணி நேரம் மின்சாரம் வழங்கப்படுகிறது. இதேபோல தொழிற்சாலைகளுக்கும் தமிழகத்தில் அதிக மின்சாரம் வழங்கப்படுகிறது.
மின்சார வெட்டு என்பது பருவநிலையை பொறுத்து. கோடைக்காலம் வந்தால் மின்சார பயன்பாடு அதிகரித்து பற்றாக்குறை ஏற்படும். அதிமுக ஆட்சிக்காலத்திலும் மின்வெட்டு இருந்தது. 3.10.1982 முதல் 20.7.1984 வரையிலும் 1.2.1985 முதல் 1.7.1990 வரையிலும் பின்னர் 1991லும் மின்தட்டுப்பாடு இருந்தது
மின்சார பற்றாக்குறையை சமாளிக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து ஏதுமில்லை. இந்த பற்றாக்குறையை சமாளிக்க எல்லாவித முயற்சிகளையும் அரசு எடுத்து வருகிறது. நீர் மின்சாரத்துக்கு நாம் பருவமழையை நம்பிதான இருக்க வேண்டி இருக்கிறது.
மேலும் மத்திய தொகுப்பிலிருந்தும் கூடுதல் மின்சாரத்தை பெற்றும் அனல் மின்சார உற்பத்தியை அதிகரித்தும் மின் பற்றாக்குறையை போக்க வேகமான முயற்சிகளை அரசு எடுத்து வருகிறது. எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு மின்சார பற்றாக்குறையை சமாளிக்க அரசு எல்லாவிதமான நடவடிக்கைளயும் எடுக்கும் என்றார்.
ஆனால் துரைமுருகன் பதிலில் திருப்தி இல்லை என்று தெரிவித்து அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications