For Daily Alerts
Just In
பென்னாகரம்: தேமுதிக நிர்வாகிகளுடன் விஜயகாந்த் தீவிர ஆலோசனை
சென்னை: பென்னாகரம் இடைத் தேர்தல் முடிவுகள் குறித்தும், பல்வேறு பிரச்சினைகள், கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்தும் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகளுடன் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார்.
கோயம்பேட்டில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நடந்த இந்தக் கூட்டத்தில், மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
விஜயகாந்த் தவிர கட்சியின் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், தலைமை நிலையச் செயலாளர் பார்த்தசாரதி உள்ளிட்டோர் கலந்த கொண்டனர்.
நேற்று காலை தொடங்கி மாலை வரை இக்கூட்டம் நீடித்தது. பென்னாகரம் இடைத் தேர்தலில் கட்சி தோற்றாலும் கூட வாக்குகள் அதிகம் கிடைத்திருப்பது குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது கட்சியைப் பலப்படுத்தவும், வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
Story first published: Monday, April 5, 2010, 9:25 [IST]