குடும்ப கட்டுபாடு ஆபரேஷன் தோல்வி: டாக்டர்கள் ரூ.4 லட்சம் நஷ்ட ஈடு வழங்க உத்தரவு
நெல்லை: குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையில் கவனக்குறைவாக இருந்து மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகள், பாதிக்கப்பட்டவருக்கு ரூ.4 லட்சம் நஷ்ட ஈடு வழங்கவேண்டும் என நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடையநல்லூர் அருகேயுள்ள கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் செய்யது சுலைமான். சைக்கிளில் சென்று ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார்.
இவரது மனைவி நத்தடு பாரிஷாள் பீவி. இவருக்கு 4 ஆண் குழந்தையும், 1 பெண் குழந்தையும் உள்ளது. கடந்த 1999ம் ஆண்டு நத்தடு பரிஷாள் பீவுக்கு கடையநல்லூர் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது.
கடையநல்லூர் அரசு மருத்துவமனை டாக்டராக பணிபுரிந்த உமாதேவி அவருக்கு பிரவசம் பார்த்தார்.
பின்னர் நத்தடு பரிஷாள் பீவிக்கு குடும்ப கட்டுபாடு ஆபரேஷன் செய்து கொள்ளுமாறு டாக்டர் உமாதேவி கூறினார்.
கடந்த 1999ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி பரிஷாள் பீவிக்கு கடையநல்லூர் மருத்துவமனையில் குடும்ப கட்டுபாடு ஆபரேஷன் செய்யப்பட்டது.
குடும்ப கட்டுபாடு ஆபரேஷன் செய்து கொண்ட 8 ஆண்டுகளுக்கு பின்பும் 2007ம் ஆண்டு ஜனவரி மாதம் பரிஷாள் பீவி மீண்டும் கருவுற்றார்.
அப்போது கல்லிடைக்குறி்ச்சி அரசு மருத்துவமனைக்கு சென்ற அவர் டாக்டர் மல்லிகாவிடம் தான் குடும்ப கட்டுபாடு ஆபரேஷன் செய்து கொண்ட பிறகும் கருவுற்று இருப்பதாகவும், கருவை கலைக்க வேண்டும் எனவும் கூறினார்.
கருவை கலைத்தால் உயிருக்கு ஆபத்தாகிவிடும் எனவே கலைக்க முடியாது என கூறிவிட்டார். தொடர்ந்து ஜூலை மாதம் 21ம் தேதி பரிஷாள் பீவிக்கு தனியார் ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தை பிறந்தது.
குடும்ப கட்டுபாடு ஆபரேஷன் செய்து கொண்ட பிறகும் தனக்கு குழந்தை பிறந்தது டாக்டரின் கவனக்குறைவான மருத்துவ சிகிச்சையும், சேவை குறைபாடும்தான் காரணம் என கூறி பரிஷாள் பீவி நெல்லை நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை நீதிபதி ராமசந்திரன், உறுப்பினர்கள் பாலசுப்பிரமணியன், ஜெசிந்தா ஆகியோர் விசாரித்தனர்.
டாக்டர்கள் உமாதேவி, மல்லிகா மற்றும் மருத்துவம், ஊரக நலப்பணிகள் குடும்ப நலத்துறை இயக்குனர் ஆகியோர் பரிஷாள் பீவிக்கு 4 லட்ச ரூபாய் நஷ்ட ஈடும், 5 ஆயிரம் ரூபாய் வழக்கு செலவுக்கும் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications