இலங்கைக் கடற்படையினர் கண்மூடித்தனமான தாக்குதல்- 28 தமிழக மீனவர்கள் காயம்

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்: இலங்கைக் கடற்படையினர் நடத்திய தாக்குதலால் தமிழகத்தைச் சேர்ந்த 28 மீனவர்கள் காயமடைந்துள்ளனர்.

கச்சத்தீவு அருகே நேற்று இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது. காயமடைந்த மீனவர்களில் 3 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உள்ளூர் மீனவர்ச ங்கத் தலைவர் அந்தோணி ராஜ் கூறுகையில், கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தினர். நள்ளிரவில் தமிழக மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர்.

மீனவர்களின் வலைகளை சேதப்படுத்தியதோடு, டீசல் கேன்களையும் தூக்கி கடலில் போட்டு விட்டனர்.

காயமடைந்த மீனவர்களில் 3 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+