மர்ம கும்பல் நடமாட்டம்: புளியங்குடி வனப்பகுதியில் அதிரடிப்படை தேடுதல் வேட்டை
புளியங்குடி: புளியங்குடி மலைப்பகுதியில் மர்ம நபர்கள் நடமாட்டம் குறித்த தகவல் கிடைத்ததை அடுத்து கியூ பிராஞ்ச் போலீசார் தமிழக - கேரள எல்லையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் மாவோயிஸ்ட் நக்சலைட்டுகள் ஊடுவலை தடுக்க மாநிலம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மர்ம நபர்கள் நடமாட்டம் இருப்பதாக தெரியவந்த தகவலால், கண்காணாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கொடைக்கானல் மலைப்பகுதியில் அதிரடிபடை எஸ்பி ஈஸ்வரன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் நக்சலைட்டுகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சில தினங்களுக்கு முன்பு புளியங்குடி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தாடியுடன் 4 பேர் சுற்றி திரிந்தனர். ஆடு, மாடு மேய்ப்பவர்களை கண்டதும் வனப்பகுதிக்குள் சென்று மறைந்து கொண்டனர். இச்சம்பவத்தால் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர்.
மேலும் கொல்கத்தாவைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் புளியங்குடி அருகே உள்ள செங்கல் சூளையில் தங்கியிருப்பதாக உளவுத்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
ஏற்கனவே இவர்களில் இருவர் கோட்டைமலை பழங்குடியின மக்கள் வசிக்கும் இருப்பிடம் வரை நேற்று முன்தினம் சுற்றி திரிந்துள்ளனர்.
இதையடுத்து சிறப்பு அதிரடி படை போலீசார் கியூ பிரிவு போலீசார் ஆகியோர் வனத்துறையினர் உதவியுடன் கோட்டைமலைப்பகுதியில் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications