வாணியம்பாடி அருகே 11 பெண்கள் மீது மண் சரிந்தது!
Subscribe to Oneindia Tamil
வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் கரைகளை சீர்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த 11 பெண்கள் மீது மண் சரிந்தது.
சரிந்த மண்ணுக்குள் புதைந்துவிட்ட 11 பேரையும் அருகில் இருந்த தொழிலாளிகள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இவர்களில் 7 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.
இவர்கள் அனைவரும் வேலூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் தேசிய ஊரக வேலை வாய்ப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்கள்.
மின்னூர் ஓட்டு கானாற்றில் கரை சீரமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். கானாற்றுக் கரையில் குகைபோல் இருந்த பகுதியில் நிழலுக்காக அமர்ந்த போது மண் சரிந்துள்ளது.












Click it and Unblock the Notifications