2 நாள் அணு ஆயுதப் பாதுகாப்பு மாநாடு இன்று தொடக்கம்
வாஷிங்டன்: 2 நாள் அணு ஆயுதப் பாதுகாப்பு மாநாடு அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் இன்று தொடங்குகிறது. 47 நாடுகளின் தலைவர்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர்.
அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் ஏற்பாட்டின் பேரில் இந்த மாநாடு நடைபெறுகிறது. இன்று தொடங்கி நாளை வரை இது நடைபெறுகிறது.
இதில் உலகத் தலைவர்கள் 47 பேர் தலைமையிலான குழு பங்கேற்கிறது. அணு ஆயுதங்கள் தீவிரவாதிகளின் கைகளுக்குப் போய் விடாமல் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பது குறித்து இந்த மாநாட்டில் முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.
மேலும் மாநாட்டின் நிறைவில் உடன்படிக்கை ஒன்றும் கையெழுத்தாகவுள்ளது.
பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
இந்த மாநாட்டுக்கு இஸ்ரேலுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த்து. ஆனால் இஸ்ரேல் மாநாட்டுக்கு வரவில்லை. வ்நதால், முஸ்லீம் நாடுகள் இஸ்ரேல் அணு ஆயுதங்களைக் கைவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து நெருக்கடி தரலாம் என்பதால் இஸ்ரேல் நைசாக நழுவி விட்டது.
இந்த மாநாட்டில் அல் கொய்தா உள்ளிட்ட தீவிரவாதிகளின் கைகளுக்கு அணு ஆயுதங்கள் போய் விடாமல் தடுப்பது குறித்து விரிவாக விவாதிக்கப்படவுள்ளது.
கடந்த ஐம்பது ஆண்டுகளில் பல்வேறு உலக நாடுகளின் அதிபர்கள், பிரதமர்கள் கலந்து கொள்ளும் மிகப் பெரிய மாநாடு ஒன்று நடைபெறுவது இதுதான் முதல் முறை என்று கூறப்படுவதால் மாநாட்டுக்கு மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
போலந்து அதிபருக்கு இரங்கல்
மாநாட்டின் தொடக்கத்தில் விமான விபத்தில் பலியான போலந்து அதிபர் லே கசின்ஸ்கிக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் 2 நிமிடம் மெளன அஞ்சலி அனுஷ்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications