மோடியுடன் மோத வேண்டாம்-சசி தரூருக்கு தாவூத் கும்பல் மிரட்டல்

தாவூத் கும்பலைச் சேர்ந்த ஷகீல் என்பவரிடமிருந்து தரூருக்கு வந்த எஸ்எம்எஸ்சில் லலித் மோடியுடன் மோத வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து உள்துறை அமைச்சகத்திடம் புகார் செய்துள்ளதாக சசி தரூரின் சிறப்பு அதிகாரியான ஜேக்கப் ஜோசப் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து இது குறித்து விசாரிக்க இன்டலிஜென்ஸ் பீரோ அமைப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஐபிஎல் கொச்சி அணியை வாங்கிய ரெண்டஸ்வஸ் நிறுவனத்துடன் தரூருக்குத் தொடர்பு இருப்பதாக ஆரம்பத்தில் அரசல் புரசலாக பேசப்பட்டது. மோடியுடனும் தரூர் நேரடியாகப் பேசி அணியை ரெண்டஸ்வஸுக்கே தருமாறு நிர்ப்பந்தித்தாகவும் கூறப்பட்டது.
ரெண்டஸ்வஸ் நிறுவனத்தில் தரூருக்கு நேரடியாக தொடர்பு இல்லை என்ற போதிலும் அவர் தற்போது காதலித்து வரும் காஷ்மீரைச் சேர்ந்த சுனந்தா புஷ்கர் என்பவருக்கு நேரடிப் பங்கு உள்ளது.
இந்தத் தகவலை ஐபிஎல் தலைவர் லலித் மோடியே ட்விட்டர் மூலம் வெளியிட்டதையடுத்து அவருக்கும் சசி தரூருக்கும் இடையே மோதல் வெடித்தது.
மோடி தனது ட்விட்டர் செய்தியில் கூறியுள்ள தகவலின்படி ரெண்டஸ்வஸ் நிறுவனத்தில் கிசன், சைலேந்தர் கெய்க்வாட், புஷ்பா கெய்க்வாட், சுனந்தா புஷ்கர், பூஜா குலாத்தி, ஜெயந்த் கோதல்வார், விஷ்ணு பிரசாத், சுந்தீப் அகர்வால் ஆகியோரை பங்குதாரராக் கொண்ட ரெண்டஸ்வஸ் நிறுவனத்திற்கு 25 சதவீத பங்குகள் உள்ளன என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் ரெண்டஸ்வஸின் உரிமையாளர்கள் யார், அதன் பங்குதாரர்கள் யார் யார் என்பது குறித்த விவரங்களுக்குள் செல்ல வேண்டாம், அதை யாரிடமும் சொல்லவும் வேண்டும் என்று தான் மிரட்டப்பட்டதாகவும் மோடி கூறியுள்ளார். இவரை மிரட்டியது தரூர் தான் என்று தெரிகிறது.
இந்த விவகாரம் தரூரின் பதவிக்கே உலை வைக்கும் சூழலை ஏற்படுத்தியுள்ள நிலையில் இப்போது அவருக்கு தாவூத் ரூபத்திலும் மிரட்டல் வந்துள்ளது.
லலித் மோடியுடன் மோத வேண்டாம் என்று தரூரை தாவூத் கும்பல் மிரட்டியதாக சசி தரூர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications