பெண்ணின் கண்ணில் மண்ணை தூவி நகை கொள்ளை!: ஹெல்மெட் கொள்ளையர்கள் அட்டூழியம்!!
சென்னை: ஹெல்மெட் அணிந்தபடி வந்த இரு கொள்ளையர்கள் வீட்டில் தனியே இருந்த பெண்ணி்ன் கண்களில் மண்ணைத் தூவி நிலை குலைய வைத்து, அவரைக் கட்டிப் போட்டு வீட்டில் இருந்த 25 பவுன் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
சென்னையை அடுத்த பள்ளிக்கரணை காமாட்சி நகரில் வசிக்கும் சாப்ட்வேர் என்ஜினியர் ராம ரெட்டி (26). இவரது மனைவி புஷ்பா (23).
நேற்று காலை புஷ்பா தனது குழந்தையுடன் தனியாக இருந்தார். அப்போது 2 பேர் ஹெல்மட் அணிந்தபடி வீட்டுக் கதவை தட்டினர்.
புஷ்பா கதவை திறந்துவுடன் ஒரு முகவரியைச் சொல்லி அது எங்குள்ளது என்று விசாரித்தனர். அவர்களுக்கு புஷ்பா பதில் சொல்லிக் கொண்டிருந்தபோதே திடீரென இருவரும் புஷ்பாவின் கண்ணில் மண்ணைத் தூவினர்.
இதில் நிலைகுலைந்த புஷ்பாவின் வாயைபொத்தி வீட்டுக்குள் இழுத்துச் சென்ற அந்த இருவரும் அவரது கை, கால்களை கட்டிப் போட்டுவிட்டு அவர் அணிந்திருந்த நகை, மற்றும் பீரோவில் இருந்த 25 பவுன் நகைகளை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டனர்.
இதையடுத்து புஷ்பாவின் அலறல் சத்தத்தையும் அவரது குழந்தையின் அழுகை சத்தத்தையும் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அவரை தனியார் ருத்துவமனையில் சேர்த்தனர்.
இது குறித்து பள்ளிக்கரணை போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. இரு கொள்ளையர்களும் ஹெல்மெட் அணிந்திருந்ததால் அவர்களது முகத்தை புஷ்பாவால் பார்க்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications