சின்னச்சாமி ஸ்டேடியம் அருகே மேலும் 3 வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு

நேற்றைய தினம் அடுத்தடுத்து இரண்டு முறை குண்டுகள் வெடித்த நிலையில், 8வது கேட்டில் மேலும் ஒரு குண்டு கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று மேலும் 3 குண்டுள் கிடைத்துள்ளன. அதில் ஒரு குண்டு ஸ்டேடியத்திற்கு அருகில் உள்ள காந்தி சிலை பகுதியிலும், மற்ற இரண்டும் ஸ்டேடிய நுழைவாயில்களிலும் கிடைத்துள்ளன.
இதையடுத்து ஸ்டேடியப் பகுதிகளில் வேறு குண்டுகள் உள்ளனவா என்பதை தீவிரமாக போலீஸார் தேடி வருகின்றனர்.
நேற்று கண்டுபிடிக்கப்பட்ட குண்டு, அமோனியம் நைட்ரேட் கலவையுடன் இரும்பு போல்ட்டுகளை உள்ளே வைத்து வெடித்து சிதறும்படி செய்யப்பட்டிருந்தது.
இந்த வெடிகுண்டு இரவு 8 மணிக்கு வெடிக்கும் வகையில் அதில், 'டைமர்' பொருத்தப்பட்டு இருந்தது. கிரிக்கெட் போட்டி முடிந்து ரசிகர்கள் வெளியே வரும் நேரத்தை கணக்கிட்டு குண்டு வைக்கப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
நேற்று அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்து மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டதை அடுத்து போலீசாரும், வெடிகுண்டு நிபுணர்களும் அப்பகுதி முழுக்க சோதனை நடத்தினர்.
சோதனையின் இந்த வெடிகுண்டு சிக்கியது. வெடிகுண்டு நிபுணர்கள் இதை கண்டுபிடித்து செயலிழக்கச் செய்யாமல் இருந்திருந்தால், பெரும் உயிர் சேதம் ஏற்பட்டிருக்கும்.
பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் மும்பை இந்தியன்ஸ் - பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையேயான 20 ஓவர் ஐபிஎல் போட்டி தொடங்குவதற்கு சிறிது நேரத்துக்கு முன்பாக 30 ஆயிரத்துக்கும் மேலான ரசிகர்கள் மைதானத்திற்குள் இருந்தனர்.
மேலும், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் மைதானத்திற்குள் நுழைவதற்காக நீண்ட வரிசையில் வெளியே காத்துக்கொண்டும் இருந்தனர்.
இந்த நேரத்தில் தான் முதல் இரண்டு குண்டுகள் நுழைவாயில் பகுதியில் வெடித்தன. ரசிகர்கள், போலீஸ்காரர்கள், தனியார் நிறுவன பாதுகாவலர்கள் என 15 பேர் வரை காயமடைந்தனர்.
ஆனால், கிரிக்கெட் போட்டியை பார்க்க வந்த ரசிகர்கள் இந்த குண்டுவெடிப்பால் சிறிதும் அச்சப்படவில்லை. போட்டியை காண வேண்டும் என்ற ஆர்வமும், போட்டி ரத்தாகி விடக்கூடாது என்ற கவலையுமே அவர்களிடம் காணப்பட்டது.
இதுபற்றி ரசிகர்கள் குறிப்பிடுகையில், 'குண்டு வெடித்தது பற்றி கொஞ்சம் கூட பயப்படவில்லை. தெண்டுல்கரின் அதிரடி ஆட்டத்தை பார்க்கவே நான் இங்கு வந்தோம்.
குண்டு வெடிப்பால் போட்டி ரத்தாகிவிடுமோ என்று தான் பயந்தேன். நல்லவேளை, போட்டியை நடத்தி விட்டார்கள். போட்டியை திருப்தியாக ரசித்தேன்' என்றனர்.












Click it and Unblock the Notifications