ஐபிஎல்லுடன் எங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை, கூறுகிறார் பவார் மகள்
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், நானோ, எனது கணவரோ, எனது குடும்பத்தினரோ ஐபிஎல்லுடனோ அல்லது ஏல நடைமுறைகளிலோ எந்தவிதமான தொடர்பையும் கொண்டிருக்கவில்லை.
காங்கிரஸ் கட்சி எங்களுக்கு எதிராக செயல்படுவதாகவும் நான் கருதவில்லை. நாங்கள் கிரிக்கெட் ரசிகர்கள் என்பது மட்டுமே எங்களுக்கும் ஐபிஎல்லுக்கும் இடையிலான தொடர்பாகும்.
தேசியவாத காங்கிரஸ் தலைவர் பிரபுல் படேலுக்கு எதிரான புகார்களிலும் சற்றும் உண்மை இல்லை.
எனது தந்தை சரத் பவார் மோடியை ஆதரிப்பதோடு நிற்கவில்லை. மாறாக தரூரையும் அவர் ஆதரிக்கிறார். கேரளாவுக்கென்று ஒரு அணி வேண்டும் என்பதில் எனது தந்தை உறுதியாகவே உள்ளார் என்றார் சுப்ரியா.












Click it and Unblock the Notifications