தபால்காரரிடம் ரூ.90 ஆயிரம் அபேஸ் செய்த மூதாட்டி கைது
தூத்துக்குடி: தூத்துக்குடி தபால் ஊழியரிடம் 90 ஆயிரம் அபேஸ் செய்த மூதாட்டி குறித்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஓட்டப்பிடாரம் அருகே உள்ள தெற்கு வீரபாண்டியபுரத்தை சேர்ந்தவர் குருசாமி. ஓய்வு பெற்ற தபால் ஊழியர். இவர் கடந்த சில தினங்களுக்கு முன் தனது மகள் திருமணத்திற்கு நகை வாங்குவதற்காக 90 ஆயிரத்துடன் தூத்துககுடிக்கு வந்தார்.
பழைய பஸ் நிலையம் அருகே நின்று கொண்டிருந்தபோது மூதாட்டி ஒருவர் குருசாமியிடம் நைசாக பேச்சு கொடுத்தார். இருவரும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது குருசாமி வைத்திருந்த 90 ஆயிரத்தை எடுத்து கொண்டு மூதாட்டி தலைமறைவாகி விட்டார்.
பணம் திருட்டு போனதை அறி்ந்த அவர் அந்த மூதாட்டியை தேடி பார்த்தார். ஆனால் அவரை காணவில்லை. இதுகுறித்து மத்திய பாகம் போலீசில் புகார் கொடுத்தார். ஆனால் குருசாமியிடம் 90 ஆயிரம் உங்களுக்கு எப்படி வந்தது, அதற்கு கணக்கு உள்ளதா என்று கேள்வி மேல் கேள்வி கேட்டனர்.
இதனால் மிரண்ட அவர் அங்கிருந்து சென்று விட்டார். பின்னர் அவர் தூத்துக்குடி ஆயுதப்படையில் வேலை பார்த்து வரும் மகனிட்ம் நடந்த சம்பவத்தை கூறினார். மேலும் அந்த மூதாட்டியை பிடிப்பதற்காக தந்தை, மகன் இருவரும் பழைய பஸ் நிலையத்தில் உள்ள கடைகளில் மூதாட்டியின் அடையாளங்களை சொல்லி அவர் குறித்து துப்பு கிடைத்தால் தெரிவிக்கும்படி கூறினர்.
இந்த நிலையில் அங்குள்ள கடைக்காரர்கள் மூதாட்டியை மடக்கி பிடித்தனர். அதன்பிறகு அவரை மத்திய பாகம் போலீசில் ஓப்படைத்தனர். விசாரணையில் அந்த மூதாட்டி மேலமங்கலத்தை சேர்ந்த கோயில் பிள்ளை மனைவி காசியம்மாள் என்பதும் அவர்தான் பணத்தை திருடி சென்றிருப்பதும் தெரிய வந்தது. கொள்ளையடித்த ரூ.90 ஆயிரத்தில் 10 ஆயிரம் ரூபாயை செலவழித்து விட்டார்.
இதையடுத்து காசியம்மாளை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து ரூ.80 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
கைதான காசியம்மாள் பழைய பஸ் நிலையத்தில் நின்று கொண்டு வயதானவர்களிடம் கவர்ச்சியாக பேச்சு கொடுத்து கைவரிசை காட்டுவது வழக்கம். அவரது வலையில் ஓய்வு பெற்ற தபால்காரர் குருசாமி சிக்கி விட்டார். போலீஸ் விசாரணையில் இந்த தகவல்கள் வெளியாகின.
-
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள்












Click it and Unblock the Notifications