ஜெர்மனி-சென்னை விமானத்தில் பயணி குடித்துவிட்டு ரகளை
சென்னை: ஜெர்மனியில் இருந்து சென்னை வந்த விமானத்தி்ல் குடித்துவிட்டு போதையில் ரகளையில் ஈடுபட்ட நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஜெர்மனியில் இருந்து இன்று காலை சென்னைக்கு 353 பயணிகளுடன் ஒரு விமானம வந்தது.
அதில் மது பரிமாறப்பட்டது. டென்மார்க் நாட்டைச் சேர்ந்த ஜெரோஸ்லேன் என்ற பயணி அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு போதையில் முன் இருக்கையில் இருந்த சிறுமியின் தலையில் தட்டினார்.
இதற்கு அந்த சிறுமியின் தாய் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்த ஜெரோஸ்லேன் பெரும் ரகளையில் ஈடுபட்டார். அவரை சமாதானப்படுத்த முயன்ற சக பயணிகளையும் தாக்க முயன்றார்.
இதையடுத்து பயணி ரகளை செய்வதாக சென்னை விமான நிலையத்துக்கு தகவல் தரப்பட்டது.
விமானம் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியதும் தொழில்துறை பாதுகாப்புப் படையினர் ஜெரோஸ்லேனை தனியாக அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது அவர் மது போதையில் தவறு செய்து விட்டதாக மன்னிப்பு கேட்டார்.
தமிழ்நாட்டை சுற்றிப் பார்க்க வந்திருப்பதாக கூறிய அவர் சிறுமியிடமும், சிறுமியின் தாயாரிடமும் மன்னிப்பு கேட்டார்.
இதையடுத்து படையினர் அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications