கருணாநிதி மீதும் மக்கள் அளவு கடந்த நம்பிக்கை-ஸ்டாலின்

சட்டசபையில் உள்ளாட்சித் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு பதிலளித்து அவர் பேசுகையில்,
இந்த புதிய சட்டப் பேரவையின் உருவாக்கத்திலிருந்து நான் என்னுடைய பதிலுரையை தொடங்குகிறேன். இந்த பேரவையின் ஒவ்வொரு கல்லும், ஒவ்வொரு மணலும், ஒவ்வொரு தூணும் முதல்வரின் உழைப்பையும், வியர்வையையும் சொல்லும்.
கரிகாலனுக்கு எப்படி கல்லணையோ, ராஜராஜனுக்கு எப்படி தஞ்சை பெரிய கோயிலோ அது போல முதல்வர் கருணாநிதியின் புகழை இந்த சட்டப் பேரவை எடுத்துக் கூறும். தஞ்சை பெரிய கோயிலின் உயரமும் 200 அடி. இந்த சட்டப் பேரவையின் உயரமும் 200 அடியாகும்.
2006ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொது தேர்தலின்போது முதல்வர் பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார். அதில் ஒன்றுதான் மீண்டும் மேலவை கொண்டு வரப்படும் என்பது. அதையே முதல் தீர்மானமாக இந்த பேரவையில் கொண்டு வந்து நிறைவேற்றினார்.
2006ம் ஆண்டு முதல் தமிழகத்தில் 11 இடைத் தேர்தல்கள் நடைபெற்றன. அனைத்திலும் திமுக கூட்டணிதான் வெற்றி பெற்றது. மக்கள் அளித்த இந்த தீர்ப்பு முதல்வர் மீதும், தமிழக அரசு மீதும் அவர்கள் வைத்துள்ள அளவு கடந்த நம்பிக்கைக்கு சிறந்த சான்றாகும் என்றார்.
பி்ன்னர் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்புகள் மீது 2009-10ம் ஆண்டு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையை ஸ்டாலின் தாக்கல் செய்தார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள் பயனடையும் வகையில் சுமார் 1 லட்சம் சுய உதவி குழுக்களை அமைக்க திட்டமிடப்பட்டது. அதன்படி 5.8.2009 முதல் 31.3.2010க்குள் 50,000 சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சிறப்பாக செயல்படும் 1000 ஊராட்சி கூட்டமைப்புகளுக்கு ஊக்கத் தொகையாக தலா ஒரு லட்சம் வீதம் ரூ.10 கோடி வழங்கப்பட்டுள்ளது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 2009-10ம் ஆண்டில் 1676.37 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ. 671.22 கோடி அதிகமாகும்.
பாரதப் பிரதமர் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1,325 கோடி நிதி ஒதுக்கீட்டில் இதுவரை 1,665.55 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைப் பணிகள் தொடங்கப்பட்டு ரூ.551.19 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 5,114 கிலோ மீட்டர் சாலைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை மூலம் 2009-10ம் ஆண்டில் ரூ. 80.08 கோடி மதிப்பீட்டில் 1,078 கிலோ மீட்டர் நீளத்துக்கு தார் சாலைகள் போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு 744.65 கி.மீ தார் சாலை போடப்பட்டுள்ளன.
அண்ணா கிராம மறு மலர்ச்சி திட்டத்தின் 2009-10ம் ஆண்டில் 2,510 கிராம ஊராட்சிகளுக்கு 507.22 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது. 46,052 பணிகள் எடுக்கப்பட்டு 40,666 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகளும் முடியும் தருவாயில் உள்ளன என்று கூறப்பட்டுள்ளது.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
3 தொகுதிகள்.. அதிமுக கூட்டணியில் இணையும் தவாக? வேல்முருகனுக்கு எடப்பாடி பழனிசாமி கொடுத்த ஆபர்!












Click it and Unblock the Notifications