திமுகவிலிருந்து பிரிந்து போனவர்கள் மீண்டும் திரும்ப வேண்டும் – கருணாநிதி அழைப்பு

சட்டசபை முன்னாள் சபாநாயகரும், தி.மு.க. தேர்தல் பணிச் செயலாளருமான சேடப்பட்டி முத்தையா - சகுந்தலா முத்தையா தம்பதியினரின் மகன் மு.மணிமாறனுக்கும், தாம்பரம் வி.ராமகிருஷ்ணன் - ஜெயலட்சுமி ஆகியோரின் மகள் பாரதிக்கும் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் திருமணம் நடைபெற்றது.
திருமணத்தை முதல்வர் கருணாநிதி நடத்தி வைத்தார். துணை முதல்வரும், தி.மு.க. பொருளாளருமான மு.க.ஸ்டாலின் முன்னிலை வகித்தார்.
விழாவில் கருணாநிதி போசுகையில், மணமகனான மணிமாறன் திருமங்கலம் சட்டமன்றத் இடைத்தேர்தலில் திமுகவின் வெற்றிக்காக பாடுபட்டவர். சேடப்பட்டி முத்தையா திமுகவில் மீண்டும் இணைந்த போது, காணாமல் போன குழந்தை கிடைத்த தாய் அடையும் மகிழ்ச்சியைப் போன்று இருந்தது.
இடையிடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக பிரிந்து சென்றவர்கள் மீண்டும் திமுவில் இணைவதை வரவேற்கிறோம். அப்படி இணைந்தவர்கள் கட்சியை கட்டிக் காத்து, சமுதாயப் பணிகளை ஆற்ற வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications