நேஷனல் பெர்மிட் லாரிகளுக்கு ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் வரி
தூத்துக்குடி: இந்தியா முழுவதும் சரக்கு ஏற்றி செல்லும் நேஷனல் பெர்மிட் லாரிகளுக்கு ஆண்டிற்கு ரூ.15 ஆயிரம் கட்டினால் போதும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் சுமார் ஒரு லட்சம் லாரிகள் பயன்பெறும் வாய்ப்பு கிடைக்கிறது. இதனால் வாடகை குறைய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் மட்டும் நேஷனல் பெர்மிட் லாரிகள் 1 லட்சத்திற்கும் மேல் ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தை சேர்ந்த ஒரு லாரி ஆந்திராவிற்கு சரக்கு ஏற்றி செல்ல வேண்டுமென்றால் அந்த மாநிலத்திற்கு செல்வதற்கு ரூ.5 ஆயிரம் செலுத்த வேண்டும். இதே போல் ஒவ்வொரு மாநிலத்திற்கும் வரி செலுத்த வேண்டும்.
பொதுவாக நேஷனல் பர்மிட் லாரிகள் குறைந்தது 5 அல்லது 6 மாநிலத்திற்காவது பொருட்கள் ஏற்றி சென்று கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் ஒவ்வொரு மாநிலத்திற்கு ஆண்டிற்கு ரூ.5 ஆயிரம் வரி கட்ட வேண்டிய நிலை இருந்து வந்தது. இதனால் குறைந்தது ஒரு லாரி 50 ஆயிரம் ரூபாய் வரை வரி கட்ட வேண்டிய நிலை இருந்து வந்தது.
இந்நிலையில் ஆந்திரா, புதுச்சேரி போன்ற மாநிலங்களில் சமீபத்தில் நேஷனல் பர்மிட் லாரிகளுக்கு பெருமளவில் வரி உயர்த்தப்பட்டது. இது லாரி உரிமையாளர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த அளவுக்கு வரி உயர்வு இருந்தால் தங்களுக்கு கட்டுபடியாகாது என்று கூறிய அவர்கள், தமிழகத்தில் உள்ள அதிகமான லாரிகள் ஆந்திரா, புதுசேரி போன்ற மாநிலங்களுக்கு செல்லும் பெர்மிட்டை சரண்டர் செய்ய துவங்கின. இது போன்ற நிலை இந்தியா முழுவதும் ஏற்பட்டது. இதனால் ஒவ்வொரு வட்டார போக்குவரத்து அலுவலத்திற்கும் ஆண்டுக்கு கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்படும் சூழ்நிலை உருவானதாக கூறப்படுகிறது.
இது சம்பந்தமாக தமிழக அரசு போக்குவரத்து துறை அதிகாரிகள் மத்திய தரை வழி போக்குவரத்து அமைச்சகத்துடன் பேசினர். இதே போல் பல மாநிலங்களில் இருந்தும் நேஷனல் பெர்மிட் லாரிகளுக்கு வரி விதிப்பு சம்பந்தமாக நல்ல முடிவு மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன.
அந்த கோரிக்கையை ஏற்று மத்திய அரசு மே 1ம் தேதி முதல் நேஷனல் பர்மிட் லாரிகள் ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் வரி கட்டினால் போதும் என்று புதிய உத்திரவை பிறப்பித்துள்ளது.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications