துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரைக்கு இரட்டைக் குழந்தை பிறந்தது
சென்னை: துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்- துர்கா தம்பதியினரின் மகள் செந்தாமரைக்கு இரட்டைக் குழந்தை பிறந்துள்ளது. இதனால் ஸ்டாலின் குடும்பம் பெரும் மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளது.
மு.க.ஸ்டாலினுக்கு உதயநிதி என்ற மகனும், செந்தாமரை என்ற மகளும் உள்ளனர். உதயநிதி- கிருத்திகா தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் மகள் செந்தாமரை- சபரீஷ் தம்பதிக்கு இன்று இரட்டைக்குழந்தை பிறந்துள்ளது.
காலை ஏழரை மணியளவில் ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. இதனால் ஸ்டாலின் தம்பதியினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
முதல்வர் கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்த மு.க.அழகிரி, அவருடைய மனைவி காந்தி அழகிரி, மகன் தயாநிதி அழகிரி, கனிமொழி, ராஜாத்தி அம்மாள், தயாநிதி மாறன், கலாநிதி மாறன், முரசொலி செல்வம், மு.க.தமிழரசு, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் ஸ்டாலின் மற்றும் செந்தாமரை தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications