காட்டுக்குள் சூதாட்டம்-10 பேர் கைது- ரூ.6 லட்சம் நகை, பைக் பறிமுதல்
திசையன்விளை: திசையன்விளை அருகே காட்டுபகுதியில் பணம் வைத்து சூதாடிய 10 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சுமார் 6 லட்சத்து 22 ஆயிரத்து 250 ரூபாய் மதிப்புள்ள 11 பவுன் செயின், 2 பவுன் மோதிரம், ஒரு வெள்ளி கொலுசு, 9 செல்போன், 6 பைக், 26 ஆயிரத்து 200 ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
திசையன்விளை அருகே உள்ள சங்கானகுளம் காட்டுபகுதியில் பணம் வைத்து பெரிய அளவில் சூதாட்டம் நடப்பதாக போலீஸ் எஸ்பி ஆஸ்ரா கார்க்கிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் அப்பகுதியில் சோதனை நடத்த போலீசாருக்கு உத்தரவிட்டார்.
வள்ளியூர் டிஎஸ்பி பொறுப்பு உதயகுமார் தலைமையில் திசையன்விளை இன்ஸ்பெக்டர் நாகமாணிக்கம், தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் குமரகுரு, திசையன்விளை சப்-இனஸ்பெக்டர் மாரியப்பன் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் நேற்று இரவு காட்டுக்குள் அதிரடியாக புகுந்தனர்.
அப்போது பணம் வைதது சூதாடிக் கொண்டிருந்தவர்கள் போலீசை கண்டதும் நாலாபுறமும் தப்பியோடினர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.
சாத்தான்குளத்தை சேர்ந்த இசக்கி, ராமகிருஷ்ணன், மூக்காண்டி, வள்ளியூர் ரமேஷ், உள்பட 10 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 26 ஆயிரத்து 200 ரூபாய் ரொக்கப் பணம், 11 பவுன் செயின், 2 பவுன் மோதிரம், ஒரு வெள்ளி கொலுசு, 9 செல்போன், 6 பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.












Click it and Unblock the Notifications