ஜல்லிக்கட்டை அனுமதிக்க அரசு தயார்- காளையை அடக்க காங் தயாரா? கருணாநிதி கேள்வி
சென்னை: விரும்பிய இடத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த அரசு அனுமதிக்கத் தயார். ஆனால் முதல் போட்டியில் காங்கிரஸ் உறுப்பினர் ஞானசேகரன் காளையை அடக்கத் தயாரா என்று கேட்டார் முதல்வர் கருணாநிதி. இதனால் அவையில் சிரிப்பலை எழுந்தது.
தமிழக சட்டசபையில் நேற்றும் ஜல்லிக்கட்டு தொடர்பான விவாதம் நடந்தது. காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஞானசேகரன் பேசுகையில்,
கடந்த 2009-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு முறைப்படுத்தும் சட்டத்தை கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் முன்மொழிய அது பின்னர் இங்கு சட்டமாக இயற்றப்பட்டது. இது தமிழகத்தில் உள்ள வீர விளையாட்டு. இது ஒழிந்து போகாமல் இருக்கவும், அதை முறைப்படுத்தவும் இந்த சட்டம் உருவாக்கப்பட்டது.
ஆனால் பல இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த போலீசார் அனுமதி அளிப்பதில்லை. குறைந்தபட்சம் ரூ.2 லட்சம் டெபாசிட் செலுத்த வேண்டும், 5 ஆண்டுகள் தொடர்ந்து நடத்த வேண்டும் என்றெல்லாம் நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன. இந்த நிபந்தனைகளை தளர்த்தி முதல்-அமைச்சர் உத்தரவிட வேண்டும் என்றார்.
அ.தி.மு.க. உறுப்பினர் செந்தில்பாலாஜி (கரூர்), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் பாலபாரதி (திண்டுக்கல்) ஆகியோரும் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்படும் நிபந்தனைகளை தளர்த்தும்படி கேட்டுக் கொண்டனர்.
விவாதத்திற்குப் பதிலளித்து முதல்வர் கருணாநிதி பேசுகையில்,
ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடைபெற வேண்டுமென்று ஞானசேகரன் கேட்கிறார். வீரவிளையாட்டு என்றும் அதை புகழ்ந்து உரைக்கிறார். எனக்குள்ள ஒரு ஆசை என்னவென்றால், அவர் கூறியதுபோல் ஜல்லிக்கட்டுக்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகு, முதல் ஜல்லிக்கட்டில், அந்த வீர விளையாட்டில் ஞானசேகரன் கலந்து கொள்வாரா? அப்படி அதற்கு அவர் எழுதித் தந்தால், அதை நம்பி, அதில் ஈடுபடுகின்ற முதல் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி தரலாம் என்றார்.
இதைக் கேட்டதும் அவையில் பலத்த சிரிப்பலை எழுந்து அடங்கியது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications