அமேதியில் ராகுல் காந்தியுடன் பில்கேட்ஸ்!

உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் ராகுல் காந்தி எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தத் தொகுதியில் பல்வேறு புதிய திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார் அவர்.
அவரது தொகுதியில் நடைபெறும் பல்வேறு திட்டங்களைப் பார்வையிட வந்தார் மைக்ரோசாஃப்ட் தலைவர் பில்கேட்ஸ்.
பில்கேட்ஸ் வருவது கடைசி நிமிடம் வரை ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. முக்கியத் தலைவர்களுக்குக் கூட நேற்றுதான் சொல்லப்பட்டது.
நேற்றிரவு அமேதி கிராமம் ஒன்றில் சுயஉதவிக் குழுப் பெண்களைச் சந்தித்துப் பேசினர் ராகுல் காந்தியும் பில்கேட்ஸும். இந்த குழுக்களை உருவாக்கியவர் ராகுல் காந்தி என்பது குறிப்பிடத்தக்கது.
அங்கு பேசிய பில்கேட்ஸ், ரேபரேலி மற்றும் அமேதி ஆகிய இரு தொகுதிகளையும் தகவல் தொழில்நுட்ப மையங்களாக மாற்றித் தருவதாக உறுதி அளித்தார்.
கடந்த ஆண்டு இதே கிராமத்தில் தங்கினர் ராகுல் காந்தியும் பிரிட்டிஷ் வெளியுறவுத்துறைச் செயலர் டேவிட் மிலிபாண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் பில்கேட்ஸ்-மெலின்டா கேட்ஸ் அறக்கட்டளை பல நூறு கோடி செலவில் பல திட்டங்களை அமலாக்கி வருவது நினைவுகூறத்தக்கது.












Click it and Unblock the Notifications