ஜெய்ராம் தந்த ராஜினாமா கடிதம்-நிராகரித்த பிரதமர்!

சமீபத்தில் சீனாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த ஜெய்ராம் ரமேஷ் அங்கு நிருபர்களிடம் பேசுகையில், சீனாவுடனான வர்த்தக விஷயத்தில் இந்திய உள்துறை அமைச்சகம் மிகுந்த எச்சரிக்கை காட்டுகிறது. இத்தகைய அதீத எச்சரிக்கை தேவையற்றது என்றார்.
இதையடுத்து அவர் சீனாவில் இருக்கும்போதே தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட பிரதமர் மன்மோகன் சிங், அவரது பேச்சை கண்டித்ததோடு விளக்கம் தருமாறும் உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து டெல்லி வந்த ஜெய்ராம் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தை சந்தித்து தன்னிலை விளக்கம் தந்தார். மேலும் பிரதமர் மற்றும் சோனியா காந்தியையும் சந்தித்து விளக்கம் தந்தார்.
ஆனால், ஜெயராம் விளக்கத்தில் சிதம்பரம் திருப்தியடையவில்லை.
இதையடுத்து தனது பதவியை ராஜினாமா ராஜினாமா செய்து சோனியாவிடமும் பிரதமரிடமும் ஜெய்ராம் கடிதம் தந்துவிட்டதாக தகவல்கள் வெளியாயின.
இந் நிலையில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஜெய்ராம் கடந்த திங்கள்கிழமையன்று தனது பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்தார். ஆனால், பிரதமர் அதை அன்றே நிராகரித்து விட்டார்.
ஜெய்ராம் தொடர்ந்து பதவியில் நீடிப்பார் என்று கூறப்பட்டுள்ளது.
சிதம்பரம் மன்னிக்க வேண்டும்-திக்விஜய் சிங்:
அதே போல சில வாரங்களுக்கு முன் நகஸல்கள் விவகாரத்தில் சிதம்பரத்தைப் பற்றி மிகக் கடுமையாக விமர்சனம் செய்திருந்த மூத்த காங்கிரஸ் தலைவரான திக்விஜய் சிங் திடீர் பல்டி அடித்துள்ளார்.
தனது கருத்து சிதம்பரத்தி்ன் மனதை காயப்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்கவும் தயார் என்றும், எனது கருத்துக்களை வாபஸ் பெற்று கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார்.
காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவரான திக்விஜய் சிங், ராகுல் காந்திக்கு மிக நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
என்றும், எனது கருத்துக்களை வாபஸ் பெற்று கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications