பொறியியல் கல்லூரிகளில் சேர பிற்பட்டோருக்கு 45%, தாழ்த்தப்பட்டோருக்கு 35% போதும்!

இதன்படி பொதுப் பிரிவு மாணவர்கள் பிளஸ் டூவில் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருந்தால் போதும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை இது 55 சதவீதமாக இருந்தது.
பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் 45 சதவீதம் மதிப்பெண் பெற்றிருந்தால் போது. இது கடந்த ஆண்டு 50 சதவீதமாக இருந்தது.
மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் 45 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்கள் 35 சதவீத மதிப்பெண் எடுத்திருந்தாலே பொறியியல் கல்லூரிகளி்ல் சேரலாம்.
இந்த அறிவிப்பை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று வெளியிட்டார்.
நிருபர்களிடம் அவர் பேசுகையில், பொறியியல் கல்லூரிகளின் நிர்வாகிகள், முதல்வர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான குறைந்தபட்ச மதிப்பெண்ணை மேலும் குறைக்க வேண்டுமென்று வலியுறுத்தினார்கள்.
அண்டை மாநிலங்களில் இருப்பது போல பிளஸ்2 தேர்வில் தேர்ச்சி பெற்றாலே மாணவர்களை பொறியியல் கல்லூரிகளில் சேர்க்க அனுமதிக்க வேண்டுமென்றும் அவர்கள் அரசை கேட்டுக் கொண்டனர்.
இது குறித்து முதல்வர் கருணாநிதி ஆலோசித்து அட்மிஷனுக்கான குறைந்தபட்ச மதிப்பெண்ணை மேலும் குறைக்க அனுமதி வழங்கினார்.
அதன்படி இதுவரை பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கு பொது பிரிவினருக்கு 55 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாகவும், பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவீதத்திலிருந்து 45 சதவீதமாகவும், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 45 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாகவும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான குறைந்தபட்ச மதிப்பெண் 35 சதவீதத்தில் எந்த மாற்றமும் இல்லையெனவும் குறைந்தபட்ச மதிப்பெண் அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதனால் இவ்வாண்டு பொறியியல் கல்லூரிகளில் அனைத்து இடங்களும் நிரப்பப்படும். மாணவர்களின் விருப்பமும் நிறைவேறும். மேலும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையும் அதிகரிக்கும்.
அட்மிஷனுக்கான குறைந்தபட்ச மதிப்பெண் குறைக்கப்பட்டிருப்பதுடன் ஒரு குடும்பத்தின் முதல் பட்டதாரி மாணவருக்குரிய பொறியியல் படிப்பு கல்விக் கட்டண தொகையை அரசே செலுத்துவதாலும் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும்.
கடந்த ஆண்டு பொறியியல் கல்லூரிகளில் 30,000 இடங்கள் காலியாக இருந்தன. இந்த ஆண்டு நிச்சயமாக அந்த நிலை இருக்காது. பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கு விண்ணப்பம் அளிப்பதற்கான கடைசி நாள் இம்மாதம் 31ம் தேதியாகும். இதனை மேலும் கால நீட்டிப்பு செய்ய அவசியம் இருக்காது.
தமிழகத்தில் பொறியியல், மருத்துவப் படிப்புகளில் சேர நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு பிளஸ் டூ மதி்ப்பெண் அடிப்படையில் மட்டுமே மாணவர்கள் சேர்க்கை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications