நளினி புழல் சிறைக்கு மாற்றம் இப்போதைக்கு இல்லை?!
வேலூர்: தன்னை சென்னை புழல் சிறைக்கு மாற்ற வேண்டும் என்ற நளினியின் கோரிக்கை குறித்து சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு பரிசீலனை செய்யப்படும் என்று தமிழக சிறைத்துறை ஐ.ஜி. ஷியாம் சுந்தர் கூறியுள்ளார்.
வேலூரில் சிறைக் காவலர் பயிற்சிப் பள்ளியில் காவலர் பயிற்சி நிறைவு விழா நடந்தது. விழாவில் பங்கேற்ற ஐ.ஜி. ஷியாம் சுந்தரிடம், வேலூர் மத்திய சிறையில் இருக்கும் ராஜீவ் கொலைக் கைதி நளினி தனக்கு வேலூர் பெண்கள் சிறையில் பாதுகாப்பு இல்லை எனவும், வேறு சிறைக்கு மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது குறித்து நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு பதிலிளித்த அவர், நளினியின் கோரிக்கையைப் போல நூற்றுக்கணக்கான சிறைவாசிகள் கோரிக்கை வைத்துள்ளனர். அவை அனைத்தையும் சீனியாரிட்டி அடிப்படை மற்றும் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு பரிசீலனை செய்த பின்னரே நிறைவேற்றப்படும்.
அதே போலத்தான் நளினியின் கோரிக்கை பற்றியும் முடிவெடுக்கப்படும் என்றார்.
நளினி தனக்கு வழங்கப்படும் உணவில் விஷம் கலக்கப்பட்ட இருப்பதாக தெரிவித்துள்ளது குறித்து கேட்டதற்கு, ஐஜி பதிலளிக்க மறுத்துவிட்டார்.












Click it and Unblock the Notifications