காலாவதி உணவுப் பொருள்-ரேஷன் கடைகளில் ரெய்ட் நடத்த முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: காலாவதி உணவுப் பொருள்கள் விற்பனையைத் தடு்க்க ரேஷன் கடைகளில் ரெய்ட் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

காலாவதியான உணவு பொருள்கள் விற்பனையை ஒடுக்க தமிழகம் முழுவதும் கடைகளில் அதிரடி ரெய்டுகள் நடந்து வருகின்றன.
அதே போல ரேஷன் கடைகளிலும் நீண்டகாலமாகவே அரிசி, மைதா, ரவை, கோதுமை போன்றவை காலாவதியான நிலையில் விற்கப்பட்டு வருகின்றன. இது குறித்து மக்கள் எவ்வளவோ புகார்கள் தந்தும் இதுவரை யாரும் நடவடிக்கை எடுத்ததில்லை.

இந் நிலையில் இப்போது ரேஷன் கடைகளிலும் சோதனை நடத்த உணவு வழங்கல் துறை முடிவு செய்துள்ளது.

ரேஷன் கடைகளில் காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது என்று தடை உள்ளது. மைதா, கோதுமை, ரவை போன்றவை நீண்ட நாட்களாக விற்காமல் இருந்தால் அதை திருப்பி அனுப்ப வேண்டும் என்ற உத்தரவு அமலில் உள்ளது. ஆனால், அதை கடைக்காரர்கள் மதிப்பதில்லை.

அப்படியே வைத்திருந்து மக்கள் தலையில் கட்டி வருகின்றனர். இந் நிலையில் ரேஷன் கடைகளிலும் சோதனைகள் நடத்தப்படவுள்ளதாக உணவு வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+